ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்! - armstrong murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 4:19 PM IST

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஆம்ஸ்ட்ராங்  மற்றும் பால் கனகராஜ்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் பால் கனகராஜ் (Credit - Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 8 பேர் சரணடைந்ததாகத் தகவல் வெளியானது. பின்னர் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது, திருவேங்கடம் என்ற நபரை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தற்போது வரை மலர்கொடி, வழக்கறிஞர் ஹரிகரன், சதீஷ்குமார், வட சென்னை அஞ்சலை, வழக்கறிஞர் ஹரிதரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பந்தமாக 200 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரனை நடத்த பாஜக மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜுக்கு தனிப்படை போலீசார் இன்று ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதான வளாகத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புது திருப்பம்.. தனியார் பள்ளி தாளாளர் கைது..! கடிதம் அனுப்பியது ஏன்?

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 8 பேர் சரணடைந்ததாகத் தகவல் வெளியானது. பின்னர் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

அவர்களை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது, திருவேங்கடம் என்ற நபரை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது என்கவுண்டர் செய்தனர். இதையடுத்து, மீதமுள்ள 10 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தற்போது வரை மலர்கொடி, வழக்கறிஞர் ஹரிகரன், சதீஷ்குமார், வட சென்னை அஞ்சலை, வழக்கறிஞர் ஹரிதரன், அஸ்வத்தாமன் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பந்தமாக 200 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரனை நடத்த பாஜக மாநில துணை தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜுக்கு தனிப்படை போலீசார் இன்று ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு வழக்கறிஞர் பால் கனகராஜ் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதான வளாகத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புது திருப்பம்.. தனியார் பள்ளி தாளாளர் கைது..! கடிதம் அனுப்பியது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.