ETV Bharat / state

“விஜயகாந்த் குறித்து பேசியதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை கண்டனம்!

Annamalai K: மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்து குறித்து ஆர்.எஸ்.பாரதி விமரிசித்து பேசியிருப்பது கடுமையான கண்டணத்திற்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 9:58 AM IST

Updated : Feb 10, 2024, 2:20 PM IST

பாஜக மாநில தலைவர்
அண்ணாமலை
அண்ணாமலை பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று (பிப்.9) ஆவடியில் தனது யாத்திரையை மேற்கொண்டார். இதில், பாஜகவினர் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கூட்டணியைப் பொறுத்தவரையில் தலைமையில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என் மண் என் மக்கள் யாத்திரை, கட்சி வளர்ச்சி என களத்தில் இருக்கிறேன். கூட்டணி பேச்சுவார்த்தையில் மாநிலத் தலைவராக தலையிட விரும்பவில்லை.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். நாள் ஒன்றுக்கு, இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளிவருகிறது. கூட்டணியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும். அதற்கான வேலையை தொண்டர்கள், தலைவர்கள் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி வெற்றியா? கருத்துக்கணிப்பு படி, பாஜக தமிழகத்தில் 20 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக கூறுகிறது. அடுத்த கருத்துக்கணிப்பில், பாஜக 20 சதவிகிதத்தை தாண்டும். பாஜக வாக்கு வங்கி பெரிய அளவில் உயரும். அவை சீட்டுகளாகவும் மாறும். மக்களின் நம்பிக்கையால் பாஜக வளர்கிறது.

இறுதியில் அதிமுகவுடன் கூட்டணியா? அனைத்து கட்சிகளுக்கும் தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. பாஜகவின் தமிழகத்திற்கான கொள்கை வேறு விதமானது. பிரதமர் மோடியை பட்டி தொட்டியெல்லாம் மக்கள் விரும்புகின்றனர். சில இடங்களில் அவரை கடவுளாகவே பார்க்கின்றனர். எனவே, பாஜக தனித்து நிற்கின்றது.

ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை கண்டனம்: மக்கள் மனதில் என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக, மறைந்த தேமுதிக தலைவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி பாஜக கௌரவித்துள்ளது. விஜயகாந்த் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைத்துள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம்.

அவர் இறந்த பிறகு அவமானப்படுத்துவது, சரித்திரத்தை மாற்றிப் பேசுவது, அவர் உயிருடன் இருக்கும்போது அனைத்து கொடுமைகளைச் செய்தது, கட்சியை உடைத்தது என அனைத்தையும் செய்த ஆர்.எஸ்.பாரதி, இன்று இறைவன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் பற்றி பேசுவதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை, நெல்லை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை..!

அண்ணாமலை பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று (பிப்.9) ஆவடியில் தனது யாத்திரையை மேற்கொண்டார். இதில், பாஜகவினர் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கூட்டணியைப் பொறுத்தவரையில் தலைமையில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். என் மண் என் மக்கள் யாத்திரை, கட்சி வளர்ச்சி என களத்தில் இருக்கிறேன். கூட்டணி பேச்சுவார்த்தையில் மாநிலத் தலைவராக தலையிட விரும்பவில்லை.

மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் கூட்டணிக்கு வரலாம். நாள் ஒன்றுக்கு, இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளிவருகிறது. கூட்டணியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும். அதற்கான வேலையை தொண்டர்கள், தலைவர்கள் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி வெற்றியா? கருத்துக்கணிப்பு படி, பாஜக தமிழகத்தில் 20 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாக கூறுகிறது. அடுத்த கருத்துக்கணிப்பில், பாஜக 20 சதவிகிதத்தை தாண்டும். பாஜக வாக்கு வங்கி பெரிய அளவில் உயரும். அவை சீட்டுகளாகவும் மாறும். மக்களின் நம்பிக்கையால் பாஜக வளர்கிறது.

இறுதியில் அதிமுகவுடன் கூட்டணியா? அனைத்து கட்சிகளுக்கும் தனித்தனிக் கொள்கைகள் உள்ளன. பாஜகவின் தமிழகத்திற்கான கொள்கை வேறு விதமானது. பிரதமர் மோடியை பட்டி தொட்டியெல்லாம் மக்கள் விரும்புகின்றனர். சில இடங்களில் அவரை கடவுளாகவே பார்க்கின்றனர். எனவே, பாஜக தனித்து நிற்கின்றது.

ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை கண்டனம்: மக்கள் மனதில் என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக, மறைந்த தேமுதிக தலைவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி பாஜக கௌரவித்துள்ளது. விஜயகாந்த் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைத்துள்ளது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம்.

அவர் இறந்த பிறகு அவமானப்படுத்துவது, சரித்திரத்தை மாற்றிப் பேசுவது, அவர் உயிருடன் இருக்கும்போது அனைத்து கொடுமைகளைச் செய்தது, கட்சியை உடைத்தது என அனைத்தையும் செய்த ஆர்.எஸ்.பாரதி, இன்று இறைவன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் பற்றி பேசுவதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை, நெல்லை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை..!

Last Updated : Feb 10, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.