ETV Bharat / state

உதயநிதி வந்ததில் இருந்து திமுகவிற்கு வெற்றிதான்.. ஆர்.எஸ்.பாரதி! - Tamil nadu Council of Ministers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததில் இருந்து அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது, அதேபோல் இனி வருங்காலத்திலும் திமுக தொடர் வெற்றியைச் சந்திக்கப் போகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. மேலும், 3 அமைச்சர்களை நீக்கி 6 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களும், இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

ஆர்.எஸ்.பாரதி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “திமுக மூத்த தலைவர்கள் முதல் கடைசித் தொண்டன் வரை நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம்தான் இது. முதலமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்ததில் திமுகவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க: "விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

இந்த மாற்றம் மன நிறைவை அளிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததில் இருந்து அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இனி வருங்காலத்திலும் திமுக தொடர் வெற்றியை சந்திக்க போகிறது. இனி திமுக பிரகாசாமாக இருக்க போகிறது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: தமிழ்நாட்டின் துணை முதமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. மேலும், 3 அமைச்சர்களை நீக்கி 6 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக அமைச்சராக பதவியேற்க உள்ளவர்களும், இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களும் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் மற்றும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்களான தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை ஒட்டி அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

ஆர்.எஸ்.பாரதி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “திமுக மூத்த தலைவர்கள் முதல் கடைசித் தொண்டன் வரை நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம்தான் இது. முதலமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்ததில் திமுகவில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க: "விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

இந்த மாற்றம் மன நிறைவை அளிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததில் இருந்து அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இனி வருங்காலத்திலும் திமுக தொடர் வெற்றியை சந்திக்க போகிறது. இனி திமுக பிரகாசாமாக இருக்க போகிறது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.