ETV Bharat / state

தேர்தல் விதிமுறைகள் மீறல்; உதயநிதி ஸ்டாலின், சசிகாந்த் செந்தில் மீது அதிமுக புகார்! - ADMK Complained against Udhayanidhi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 8:49 PM IST

AIADMK Complained against Minister Udhayanidhi: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது இதுவரை நடைமுறைப்படுத்திய திட்டங்கள் இனி நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக, அதிமுக சார்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

admk-advocate-wing-complained-against-udhayanidhi-and-sasikanth-senthil-about-violation-of-election-rules
தேர்தல் விதிமுறைகளை மீறல்; உதயநிதி மற்றும் சசிகாந்த் செந்தில் மீது புகார் மனு அளித்த அதிமுக! காரணம் என்ன?

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைs செயலாளர்மான ஆர்.எம்.பாபு முருகவேல், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து இண்டு வெவ்வேறு புகார் மனுக்களை அளித்துள்ளார். அதில், “திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலின் போது, நேற்று முன்தினம் (மார்ச் 27) திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்,தேர்தல் விதிகளை மீறி வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தன்னுடன் 5 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று தேர்தல் விதியை மீறி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அனுமதி அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்ச் 26ஆம் தேதி அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, தேர்தல் விதியை மீறும் விதமாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தைப் பற்றியும், புதிய திட்டங்களைப் பற்றியும் பேசக்கூடாது என்கின்ற விதியை மீறி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தேர்தல் விதிமுறை மீறியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது பிரச்சாரத்தில் பொது வெளியில் என்னென்ன பேச வேண்டும் என அமைச்சராக உள்ள ஒருவருக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தும் அவர் பேசியிருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஆரத்தி வீடியோ சர்ச்சை.. நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் உத்தரவு! - Annamalai Aarathi Video

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைs செயலாளர்மான ஆர்.எம்.பாபு முருகவேல், தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து இண்டு வெவ்வேறு புகார் மனுக்களை அளித்துள்ளார். அதில், “திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலின் போது, நேற்று முன்தினம் (மார்ச் 27) திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்,தேர்தல் விதிகளை மீறி வேட்புமனு தாக்கல் செய்யும் போது, தன்னுடன் 5 சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று தேர்தல் விதியை மீறி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு அனுமதி அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்ச் 26ஆம் தேதி அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, தேர்தல் விதியை மீறும் விதமாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தைப் பற்றியும், புதிய திட்டங்களைப் பற்றியும் பேசக்கூடாது என்கின்ற விதியை மீறி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகவும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தேர்தல் விதிமுறை மீறியது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது பிரச்சாரத்தில் பொது வெளியில் என்னென்ன பேச வேண்டும் என அமைச்சராக உள்ள ஒருவருக்கு தெரியாதா? அப்படி தெரிந்திருந்தும் அவர் பேசியிருக்கிறார். எனவே, அவர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலை ஆரத்தி வீடியோ சர்ச்சை.. நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் உத்தரவு! - Annamalai Aarathi Video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.