ETV Bharat / state

கல்வி விருது விழாவில் விஜய் பேசிய அரசியல் என்ன? - Vijay education award event

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 2:28 PM IST

Actor vijay political speech: கல்வி விருது விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாணவர்கள் மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் பற்றியும் பேசியுள்ளார்.

மாணவரக்ளுடன் விஜய் புகைப்படம்
மாணவர்களுடன் விஜய் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘கல்வி விருது விழா’ என்ற நிகழ்வில் மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய விஜய், “இங்கு நமக்கு அதிகம் தேவை என்றால், நல்ல தலைவர்கள். இதனை நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. எதிர்காலத்தில் அரசியலும் மாணவர்களுக்கு ஒரு கரியர் தேர்வாக இருக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்.

செய்தித்தாள்கள் நிறைய படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு, பெற்றொருக்கு அடுத்தபடியாக நண்பர்கள் மிகவும் முக்கியம். நண்பர்கள் தவறான செயல்களில் ஈடுபடும் போது அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள்.

தவறான பழக்கத்தில் ஈடுபட்டு, உங்களது அடையாளத்தை இழந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ள நிலையில், ஒரு பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு கஷ்டமாக உள்ளது. போதைப்பொருள் புழக்கத்திற்கு அரசை குறை கூறுவதற்கு முன்னதாக நம் வாழ்க்கையை நாம்தான் பார்க்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 'Say no to temporary pleasures, Say no to drugs' என்று விஜய் மாணவர்களை இரண்டு முறை உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அரங்கில் இருந்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக மாணவர்கள் மத்தியில் உரையாடி உள்ளார்.

இதையும் படிங்க: 'என் அன்புத் தளபதி விஜய்'.. தவெக தலைவருக்கு சீமான் வாழ்த்து! - vijay kalvi viruthu

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ‘கல்வி விருது விழா’ என்ற நிகழ்வில் மாணவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய விஜய், “இங்கு நமக்கு அதிகம் தேவை என்றால், நல்ல தலைவர்கள். இதனை நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. எதிர்காலத்தில் அரசியலும் மாணவர்களுக்கு ஒரு கரியர் தேர்வாக இருக்க வேண்டும். படிக்கும் காலத்திலேயே மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்.

செய்தித்தாள்கள் நிறைய படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு, பெற்றொருக்கு அடுத்தபடியாக நண்பர்கள் மிகவும் முக்கியம். நண்பர்கள் தவறான செயல்களில் ஈடுபடும் போது அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள்.

தவறான பழக்கத்தில் ஈடுபட்டு, உங்களது அடையாளத்தை இழந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ள நிலையில், ஒரு பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு கஷ்டமாக உள்ளது. போதைப்பொருள் புழக்கத்திற்கு அரசை குறை கூறுவதற்கு முன்னதாக நம் வாழ்க்கையை நாம்தான் பார்க்க வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து, 'Say no to temporary pleasures, Say no to drugs' என்று விஜய் மாணவர்களை இரண்டு முறை உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அரங்கில் இருந்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கே காரணம் என விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக மாணவர்கள் மத்தியில் உரையாடி உள்ளார்.

இதையும் படிங்க: 'என் அன்புத் தளபதி விஜய்'.. தவெக தலைவருக்கு சீமான் வாழ்த்து! - vijay kalvi viruthu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.