ETV Bharat / state

ஓராண்டாக சிறையில் செந்தில் பாலாஜி.. 2023 ஜூன் 14 முதல் 2024 ஜூன் 14 வரை வழக்கின் பாதை! - senthil balaji case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 4:18 PM IST

SENTHIL BALAJI CASE: சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது வரை சிறையில் உள்ள நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்தான அலசல்..

செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம்" ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் செய்தனர்.

ஜாமீன் நிராகரிப்பு: இதையடுத்து, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு ராஜினாமா செய்துள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.

மேலும், தொடர் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

விசாரணை இழுத்தடிப்பு?: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டதும், வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை, அந்த ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படி தனக்கான சட்ட வாய்ப்புகளை செந்தில் பாலாஜி வழக்குகள் தொடர்வதன் மூலம் விசாரணையை இழுத்தடிப்பதாக அமலாக்கத்துறை தெரிவிக்கிறது.

இறுதியாக, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணையில், அமலாக்கத்துறை விசாரணையை அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தடுக்கும் வகையில் முன்னாள் செந்தில் பாலாஜி தொடர்ந்து சட்டரீதியாக பல்வேறு காரணங்களை கூறி வழக்குகள் மூலம் இழுத்தடித்து வருகிறார் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இந்தநிலையில் நாளை மறுநாள்(14.06.2024) சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சோனியா காந்தி, மம்தா வரிசையில் கனிமொழி.. 18 ஆண்டு கால அனுபவத்திற்கு கிடைத்த மரியாதை!

சென்னை: கடந்த 2011-2015-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக, 1 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரில், செந்தில் பாலாஜி அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக கூறி வழக்கை முடித்து வைத்தது.

உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே சமரசம்" ஏற்பட முடியும். சமரசம் ஏற்பட்டதால் பணம் கைமாறியது உறுதியாகிறது. அதனால், மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் செய்தனர்.

ஜாமீன் நிராகரிப்பு: இதையடுத்து, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் கூறி ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு ராஜினாமா செய்துள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது.

மேலும், தொடர் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 3 மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

விசாரணை இழுத்தடிப்பு?: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன், அமலாக்கத்துறை ஆவணங்களை தனக்கு வழங்கும் வரை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டதும், வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை, அந்த ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மீண்டும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படி தனக்கான சட்ட வாய்ப்புகளை செந்தில் பாலாஜி வழக்குகள் தொடர்வதன் மூலம் விசாரணையை இழுத்தடிப்பதாக அமலாக்கத்துறை தெரிவிக்கிறது.

இறுதியாக, 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணையில், அமலாக்கத்துறை விசாரணையை அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் தடுக்கும் வகையில் முன்னாள் செந்தில் பாலாஜி தொடர்ந்து சட்டரீதியாக பல்வேறு காரணங்களை கூறி வழக்குகள் மூலம் இழுத்தடித்து வருகிறார் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

இந்தநிலையில் நாளை மறுநாள்(14.06.2024) சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சோனியா காந்தி, மம்தா வரிசையில் கனிமொழி.. 18 ஆண்டு கால அனுபவத்திற்கு கிடைத்த மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.