ETV Bharat / state

'தப்பு பண்ணா மட்டும் பொய் கேஸ் போடுங்க'.. காதலியுடன் தற்கொலைக்கு முயன்ற நபர் உயிரிழப்பு..!

போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுவிடுவேன் என மிரட்டியதாக தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மோகன் ராஜ்
மோகன் ராஜ் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த ஆண்டு செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பார்த்திபன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காரனோடை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மோகன் ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பார்த்திபன் கொலை வழக்கில் தாமாக சரணடைந்த மோகன் ராஜை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், பார்த்திபன் கொலை வழக்கில் மோகன் ராஜ் போலியாக சரண்டைந்துள்ளார் என கூறி அவரை இந்த வழக்கில் எதிரியாக சேர்க்க மறுத்து விடுவித்தனர்.

அதைவேளையில், 30 கிலோ கஞ்சா வாங்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக வழக்கு பதிவு செய்து மோகன் ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த மோகன் ராஜ் ஜாமீனில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதிக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அதன் பின்னர், மோகன் ராஜ் எவ்வித குற்றங்களிலும் ஈடுப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மோகன் ராஜ் வெளியே வந்த பின்னரும், சோழவரம் போலீசார் அவர் மீது வழக்கு போடுவதாக நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் அவரது காதலி ஷாலினி என்ற பெண்ணிற்கும் நெருக்கடி கொடுத்ததாக கூறி மோகன் ராஜ் வீடியோ வெளியிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திராவில் மோகன் ராஜ் மற்றும் அவரது காதலி இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அப்போது, அங்கே அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர்கள், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மோகன் ராஜ் இறந்துவிட்டார். அவரது காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றபோது மோகன் ராஜ் வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மோகன் ராஜ், '' போலீசுக்கு இப்போது நிம்மதியாக இருக்கும்.. தப்பு பண்ணா மட்டும் கேஸ் போடுங்க, தப்பு பண்ணாதவங்க வீட்டுக்கு போய் டார்ச்சர் பண்ணாதீங்க.. ஷாலினி என்னால் பல துன்பங்களை அனுபவித்துவிட்டாள்.. அவளும் என்கூட வர போகிறாள்'' என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். மோகன் ராஜ் தற்போது இறந்துவிட்ட நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: கடந்த ஆண்டு செங்குன்றம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பார்த்திபன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், காரனோடை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மோகன் ராஜ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பார்த்திபன் கொலை வழக்கில் தாமாக சரணடைந்த மோகன் ராஜை காவலில் எடுத்து விசாரித்த போலீசார், பார்த்திபன் கொலை வழக்கில் மோகன் ராஜ் போலியாக சரண்டைந்துள்ளார் என கூறி அவரை இந்த வழக்கில் எதிரியாக சேர்க்க மறுத்து விடுவித்தனர்.

அதைவேளையில், 30 கிலோ கஞ்சா வாங்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக வழக்கு பதிவு செய்து மோகன் ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் சுமார் 14 மாதங்கள் சிறையில் இருந்த மோகன் ராஜ் ஜாமீனில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதிக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

அதன் பின்னர், மோகன் ராஜ் எவ்வித குற்றங்களிலும் ஈடுப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மோகன் ராஜ் வெளியே வந்த பின்னரும், சோழவரம் போலீசார் அவர் மீது வழக்கு போடுவதாக நெருக்கடி கொடுத்ததாகவும், மேலும் அவரது காதலி ஷாலினி என்ற பெண்ணிற்கும் நெருக்கடி கொடுத்ததாக கூறி மோகன் ராஜ் வீடியோ வெளியிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திராவில் மோகன் ராஜ் மற்றும் அவரது காதலி இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அப்போது, அங்கே அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அவர்கள், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மோகன் ராஜ் இறந்துவிட்டார். அவரது காதலி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்றபோது மோகன் ராஜ் வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மோகன் ராஜ், '' போலீசுக்கு இப்போது நிம்மதியாக இருக்கும்.. தப்பு பண்ணா மட்டும் கேஸ் போடுங்க, தப்பு பண்ணாதவங்க வீட்டுக்கு போய் டார்ச்சர் பண்ணாதீங்க.. ஷாலினி என்னால் பல துன்பங்களை அனுபவித்துவிட்டாள்.. அவளும் என்கூட வர போகிறாள்'' என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். மோகன் ராஜ் தற்போது இறந்துவிட்ட நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.