ETV Bharat / state

பெண்கள் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ.. சென்னையில் பெயிண்டர் கைது! - Cameras in Restrooms

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 7:57 PM IST

Chennai Crime: சென்னையில் பெண்கள் பாத்ரூமில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

சென்னை: சென்னையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, அங்கு ஜன்னலில் மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தகராறு செய்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். பின்னர், இது குறித்து
அந்தப் பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். அப்போது, செல்போனை மறைத்து வைத்திருந்த 33 வயது நபரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்நபர், அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்தவர் என்றும், அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் ஜன்னலில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.

பின்னர், கைது செய்யப்பட்டவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை: சென்னையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் பெண் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமிற்குள் சென்ற போது, அங்கு ஜன்னலில் மறைவாக கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பெண்ணிடம் தகராறு செய்து மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். பின்னர், இது குறித்து
அந்தப் பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் பிஎன்எஸ் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். அப்போது, செல்போனை மறைத்து வைத்திருந்த 33 வயது நபரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்நபர், அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்தவர் என்றும், அருகில் பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூம் ஜன்னலில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.

பின்னர், கைது செய்யப்பட்டவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தஞ்சை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.