ETV Bharat / state

தமிழக மீனவர்கள் 22 பேர் நடுக்கடலில் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்! - fishermen arrested

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 10:29 AM IST

FISHERMEN ARRESTED: தூத்துக்குடி, தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவ குடும்பத்தினர்
மீனவ குடும்பத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது.

இதில் படகு சேதமடைந்ததால், மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 மீனவர்கள் கைது: தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் என்ற மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா (45), என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி ஒர் விசைப்படகில் 12 மீனவர்களும், 23ஆம் தேதி மற்றொரு படகில் 10 மீனவர்களும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மீனவர்கள் நேற்று மாலை இரண்டு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு படகுகளையும், மீனவர்களை விடுவித்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவ குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "நெல்லை மாதிரி நடக்கக்கூடாது" - கோவை திமுக கவுன்சிலர்களுக்கு ரகசிய மீட்டிங்.. மேயர் தேர்தல் பரபரப்பு!

தூத்துக்குடி: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தொடர்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியது.

இதில் படகு சேதமடைந்ததால், மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி இறந்தார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருப்பது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 மீனவர்கள் கைது: தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் என்ற மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா (45), என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 21ஆம் தேதி ஒர் விசைப்படகில் 12 மீனவர்களும், 23ஆம் தேதி மற்றொரு படகில் 10 மீனவர்களும் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மீனவர்கள் நேற்று மாலை இரண்டு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை மன்னார் தென் கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு படகுகளையும், மீனவர்களை விடுவித்து தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவ குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "நெல்லை மாதிரி நடக்கக்கூடாது" - கோவை திமுக கவுன்சிலர்களுக்கு ரகசிய மீட்டிங்.. மேயர் தேர்தல் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.