ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக்: பாய்மர படகு போட்டி களமிறங்கும் தமிழக வீரர்கள்! - paris olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 10:39 AM IST

Olympic Sailing: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெறும் பாய்மர படகு போட்டில் தமிழகத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் கோப்புப்படம்
விஷ்ணு சரவணன் மற்றும் நேத்ரா குமணன் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5 ஆம் நாளான நேற்றைய முடிவில் சைனா முதலிடத்தில் (9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில் 2 பதங்கங்களுடன் 39வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில் 6வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகள் பங்கேற்கின்றன. இதில் பாய்மர படகு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் குறித்து காண்போம்.

விஷ்ணு சரவணன்: வேலூரை மாவட்டத்தை சேர்ந்த வீரர் விஷ்ணு சரவணன், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் ஆடவர் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கிறார். சிறுவயது முதலே இந்த விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக, 9 வயதில் முதலே பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க தொடங்கினார்.

ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வரும் இவர், 2019இல் குரோஷியாவில் நடந்த 21 வயதிற்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் சர்வதேச பதக்கத்தை(வெண்கலம்) வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து முசானா ஓபன் சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதகங்களை குவித்துள்ளார். இதே ஒலிம்பிக் போட்டியிலும் வெற்று பதக்கத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக கடுமையான பயிற்சி பெற்று வந்த நேத்ரா இன்று களமிறங்கவுள்ளார், அவர் வெற்றி பெற்று பதக்க கனவை நனவாக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நேத்ரா குமணன்: சென்னையைச் சேர்ந்த 27 வயதான நேத்ரா குமணன் தனது 17வது வயதில் தேசிய அளவில் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்ள தொடங்கினார். பின்னர் இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம், உலகக் கோப்பைத் தொடரில் வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதங்களையும் வென்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தநிலையில் இன்று இரவு 7.05 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுள்ள நேத்ரா குமணன் பங்கேற்கவுள்ளார். முன்னாதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்து இருந்த அவர்,"கடந்த மூன்று மாதங்களாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறேன்.

பாரிஸ் நகரில் காலநிலையை மாறிக்கொண்டே இருக்கும். என் போட்டியின்போது எப்படிப்பட்ட சூழ்நிலை வேண்டுமானாலும் இருக்கலாம். என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முயல்வேன்" என்று தெரிவித்து இருந்தார். கடந்த 3 மாதங்களாகக் கடுமையான பயிற்சி பெற்று வந்த நேத்ரா இன்று களமிறங்கவுள்ளார், அவர் வெற்றி பெற்று பதக்க கனவை நனவாக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:கர்ப்பத்திலும் நாட்டுக்காக விளையாட்டு.. எகிப்து வாள்வீச்சு வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு!

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 5 ஆம் நாளான நேற்றைய முடிவில் சைனா முதலிடத்தில் (9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதில் 2 பதங்கங்களுடன் 39வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில் 6வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகள் பங்கேற்கின்றன. இதில் பாய்மர படகு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்கள் குறித்து காண்போம்.

விஷ்ணு சரவணன்: வேலூரை மாவட்டத்தை சேர்ந்த வீரர் விஷ்ணு சரவணன், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் ஆடவர் பாய்மர படகு போட்டியில் பங்கேற்கிறார். சிறுவயது முதலே இந்த விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக, 9 வயதில் முதலே பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க தொடங்கினார்.

ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வரும் இவர், 2019இல் குரோஷியாவில் நடந்த 21 வயதிற்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் சர்வதேச பதக்கத்தை(வெண்கலம்) வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து முசானா ஓபன் சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதகங்களை குவித்துள்ளார். இதே ஒலிம்பிக் போட்டியிலும் வெற்று பதக்கத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக கடுமையான பயிற்சி பெற்று வந்த நேத்ரா இன்று களமிறங்கவுள்ளார், அவர் வெற்றி பெற்று பதக்க கனவை நனவாக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நேத்ரா குமணன்: சென்னையைச் சேர்ந்த 27 வயதான நேத்ரா குமணன் தனது 17வது வயதில் தேசிய அளவில் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்ள தொடங்கினார். பின்னர் இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம், உலகக் கோப்பைத் தொடரில் வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதங்களையும் வென்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தநிலையில் இன்று இரவு 7.05 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுள்ள நேத்ரா குமணன் பங்கேற்கவுள்ளார். முன்னாதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டியளித்து இருந்த அவர்,"கடந்த மூன்று மாதங்களாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறேன்.

பாரிஸ் நகரில் காலநிலையை மாறிக்கொண்டே இருக்கும். என் போட்டியின்போது எப்படிப்பட்ட சூழ்நிலை வேண்டுமானாலும் இருக்கலாம். என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முயல்வேன்" என்று தெரிவித்து இருந்தார். கடந்த 3 மாதங்களாகக் கடுமையான பயிற்சி பெற்று வந்த நேத்ரா இன்று களமிறங்கவுள்ளார், அவர் வெற்றி பெற்று பதக்க கனவை நனவாக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:கர்ப்பத்திலும் நாட்டுக்காக விளையாட்டு.. எகிப்து வாள்வீச்சு வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.