ETV Bharat / sports

தரவரிசை மூலம் தகுதியானதால் தோல்வியா? ஒலிம்பிக் 5000மீ இந்தியாவின் சொதப்பலுக்கு என்ன காரணம்? - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 12:25 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் பரூல் சவுத்ரி, அங்கிதா தயானி பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.

Etv Bharat
Representational Image (AP)

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 2023ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் தங்கம் வென்ற பரூல் சவுத்ரி, அங்கிதா தயானி ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையத்திற்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஹீட் பிரிவில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு முயற்சியிலும் 20 வீராங்கனைகள் ஓடுவர். இந்த பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் பரூல் சவுத்ரி மற்றும் அங்கிதா தயானி முறையே 24வது மற்றும் 40வது இடத்தை பிடித்தனர். முதல் ஹூட் முயற்சியில் பரூல் சவுத்ரி பந்தைய தூரத்தை 15:10.68 மணி நேரத்தில் கடந்து 14வது இடத்தை பிடித்தார்.

மேலும், 15 நிமிடம் 10.35 விநாடிகளில் தேசிய சாதனை படைக்க வேண்டிய முயற்சியை நூலிழையில் தவறவிட்ட பரூல் சவுத்ரி, டாப் 8 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார். அதேபோல் இரண்டாவது ஹீட் சுற்றில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா தயானி, 16:19:38 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து 20வது இடத்தை பிடித்தார்.

இரண்டாவது ஹீட் சுற்றில் அங்கிதா தயானி மட்டும் 16 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், மற்ற வீராங்கனைகள் அனைவரும் 15 நிமிடங்களுக்குள் பந்தையத்தை நிறைவு செய்தனர். இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இருவரும் தவறவிட்ட நிலையில், 5 ஆயிரம் மீட்டர் தடகளத்தில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு கலைந்தது.

கென்யா வீராங்கனை பெயித் கிபிகோன், பந்தைய தூரத்தை 14:57.56 நிமிடங்களில் நிறைவு செய்து முதல் இடம் பிடித்தார். பெயித் கிபொகோன் நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டச் வீராங்கனை சிபா ஹசன் 14:57.65 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

தற்போதைய 5 ஆயிரம் மீட்டர் உலக சாதனையாளர் எத்தியோப்பியாவின் குடாப் செகே 14:57.84 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி தனது அடுத்த ஆட்டத்தில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) கலந்து கொள்கிறார்.

உலக தரவரிசையின் அடிப்படையில் இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கு தகுதி பெற்றார். அதேநேரம் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திற்கான ஒலிம்பிக் தகுதியின் படி 14:52.00 நிமிடங்களில் அவர் பந்தய தூரத்தை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா தயானியும் உலக தரவரிசையின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் குண்டு எறிதல்! பதக்க வாய்ப்பை இழந்த தஜிந்தர்பால் சிங்! - paris olympics 2024

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 2023ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் தங்கம் வென்ற பரூல் சவுத்ரி, அங்கிதா தயானி ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் டாப் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையத்திற்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஹீட் பிரிவில் இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு முயற்சியிலும் 20 வீராங்கனைகள் ஓடுவர். இந்த பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனைகள் பரூல் சவுத்ரி மற்றும் அங்கிதா தயானி முறையே 24வது மற்றும் 40வது இடத்தை பிடித்தனர். முதல் ஹூட் முயற்சியில் பரூல் சவுத்ரி பந்தைய தூரத்தை 15:10.68 மணி நேரத்தில் கடந்து 14வது இடத்தை பிடித்தார்.

மேலும், 15 நிமிடம் 10.35 விநாடிகளில் தேசிய சாதனை படைக்க வேண்டிய முயற்சியை நூலிழையில் தவறவிட்ட பரூல் சவுத்ரி, டாப் 8 இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார். அதேபோல் இரண்டாவது ஹீட் சுற்றில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா தயானி, 16:19:38 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து 20வது இடத்தை பிடித்தார்.

இரண்டாவது ஹீட் சுற்றில் அங்கிதா தயானி மட்டும் 16 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், மற்ற வீராங்கனைகள் அனைவரும் 15 நிமிடங்களுக்குள் பந்தையத்தை நிறைவு செய்தனர். இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இருவரும் தவறவிட்ட நிலையில், 5 ஆயிரம் மீட்டர் தடகளத்தில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு கலைந்தது.

கென்யா வீராங்கனை பெயித் கிபிகோன், பந்தைய தூரத்தை 14:57.56 நிமிடங்களில் நிறைவு செய்து முதல் இடம் பிடித்தார். பெயித் கிபொகோன் நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டச் வீராங்கனை சிபா ஹசன் 14:57.65 நிமிடங்களில் பந்தைய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

தற்போதைய 5 ஆயிரம் மீட்டர் உலக சாதனையாளர் எத்தியோப்பியாவின் குடாப் செகே 14:57.84 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி தனது அடுத்த ஆட்டத்தில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) கலந்து கொள்கிறார்.

உலக தரவரிசையின் அடிப்படையில் இந்திய வீராங்கனை பரூல் சவுத்ரி நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கு தகுதி பெற்றார். அதேநேரம் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திற்கான ஒலிம்பிக் தகுதியின் படி 14:52.00 நிமிடங்களில் அவர் பந்தய தூரத்தை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா தயானியும் உலக தரவரிசையின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் குண்டு எறிதல்! பதக்க வாய்ப்பை இழந்த தஜிந்தர்பால் சிங்! - paris olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.