ETV Bharat / sports

அரசு வேலையை விட எளிதில் கிடைக்கும் கிரிக்கெட் அம்பயர் பணி! கோடிகளில் சம்பளம்! என்னென்ன வசதி தெரியுமா? - How to become a cricket umpire

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Cricket Umpire Salary: இந்தியாவில் அரசு வேலை வாங்குவதை விட எளிதான பணியாக உள்ளது கிரிக்கெட் நடுவராக மாறுவது. அப்படி கிரிக்கெட் அம்பயராக மாறுவதற்கு என்ன தகுதி வேண்டும், எவ்வளவு சம்பளம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Billy Bowden, Richard Kettleborough and Nitin Menon (AFP Photo)

ஐதராபாத்: உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது பிசிசிஐ தான், அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலகளவில் கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக மாற முயற்சித்து அதில் தோல்வி அடைகிறீர்களா, அப்படியன்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான்.

அம்பயர் ஆவதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இணையாக பெயர், புகழ், பணம் என அனைத்தையும் சம்பாதிக்கலாம். மேலும், இந்திய அரசின் ஏ கிரேட் அதிகாரிக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டிலும் கிரிக்கெட் அம்பயருக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது அதிகம். அதேநேரம் அரசு வேலையை காட்டிலும் அம்பயராவது என்பது சற்று எளிதானது தான் என்றால் வியப்பாகத் தான் இருக்கும்.

Representative image
Representative image (AFP Photo)

கிரிக்கெட்டின் இதயம் இந்தியா:

மற்ற நாடுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒரு மதம், திருவிழா போன்று மக்கள் வெற்றிகளை கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு உருவாகி இருந்தாலும், அதிக கிரிக்கெட் வீரர்கள், அதிகளவில் இளைஞர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தான் காணப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பும் இளைஞர்கள் மைதானத்தில் பந்துவீசுவது அல்லது பேட்டிங் செய்வது மூலமாகத் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் அல்ல. மாறாக அம்பயர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஐசிசி அம்பயர் சம்பளம் (Umpire salary) எவ்வளவு?

அம்பயர்கள் இரண்டு வகைகளாக உள்ளனர். ஒன்று அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கீழ் வருபவர்கள். மற்றவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கீழ் நியமிக்கப்படுபவர்கள். இதில் நாடுகளின் கிரிக்கெட் வாரிய அம்பயர்களை விட ஐசிசியின் நடுவர்கள் அதிகளவில் ஊதியம் பெறுகின்றனர்.

ஐசிசியின் தரம் வாய்ந்த போட்டி நடுவர்கள் ஆண்டுக்கு 66 லட்ச ரூபாய் முதல் 1 கோடியே 67 லட்ச ரூபாய் வரை ஊதியமாக பெறுகின்றனர். இதில் போட்டிக் கட்டணம், மற்ற சலுகைகள் என அனைத்தும் அடங்கும். இது தவிர ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் அம்பயர்கள் அதிகளவில் சம்பாதிக்கின்றனர்.

டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடுவரின் ஊதியம் 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். அதேநேரம் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஐசிசி நடுவரின் ஊதியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். இதில் நடுவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் வேறுபடும். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் அலீம் தர் (Aleem Dar) தான் அதிக சம்பளம் வாங்கும் நடுவர் ஆவார்.

Salary and qualification of cricket umpire (AFP Photo)
cricket umpire Representative image (AFP Photo)

பிசிசிஐ நடுவர் சம்பளம் எவ்வளவு?:

பிசிசிஐ-யை பொறுத்தவரை அம்பயர்களுக்கு நிலையான ஊதியம் என்பது கிடையாது. அவர்கள் பல்வேறு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, வயது, அனுபவம், படிப்பு ஆகியவற்றின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் ஏ+, ஏ, பி மற்றும் சி ஆகிய அடுக்குகளாக அம்பயர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் ஏ+ மற்றும் ஏ பிரிவில் உள்ள நடுவர்களுக்கு நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பி மற்றும் சி பிரிவில் உள்ள அம்பயர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் அவர்களது பணித் திறமை ஆகியவை கணக்கிடப்பட்டு ஐசிசியின் எலைட் அம்பயர் பிரிவில் சேர்க்கப்படுவர். அதன் மூலம் அவர்கள் அதிக சம்பளம் பெற முடியும்.

அம்பயராக என்ன தகுதி தேவை?

அம்பயராக கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டிய அனுபவம் வேண்டியதில்லை. ஆனால், கிரிக்கெட்டை பற்றி அனைத்தையும் அறிந்து இருக்க வேண்டும். என்னென்ன விதிமுறைகள் உள்ளன, துல்லியமாக முடிவு எடுப்பது, எந்த அணியையும் சாராமல் நடப்பது, நல்ல பேச்சுத் திறன், உடல் தகுதி உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அம்பயராவது எப்படி?

படி 1: மாநில கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.

படி 2: ஸ்டேட் அசோசியேஷன் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்று, அம்பயர் சான்றிதழுக்கான திட்டத்தின் BCCI நடுவர் அகாடமியில் சேர வேண்டும்.

படி 3: BCCI நடுவர் அகாடமி நடத்தும் நடுவர் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

படி 4: மாநில கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு நடுவர் சான்றிதழைப் பெற வேண்டும்.

படி 5: மாநில அளவில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் நடுவர் அனுபவத்தைப் பெற்று, பின்னர் BCCI நிலை 1 தேர்வில் விண்ணப்பித்து வெற்றி பெற வேண்டும்.

படி 6: பிசிசிஐயில் நடுவராக ஆவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ நடத்தும் லெவல் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு முன் 3 நாள் பயிற்சி வகுப்பையும் பிசிசிஐ நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தேர்வின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பாடநெறி கோட்பாடுகள் வழங்கப்படுகின்றன.

அதில் அவர்களுக்கு நடுவரைப் பற்றி கற்பிக்கப்படுகிறது. பின்னர் நேர்காணல் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் லெவல் 2 தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் பிசிசிஐ-யில் நடுவர்களாக சேரலாம்.

படி 7: அம்பயரிங்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினால், சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருப்பதற்காக ஐசிசியின் நடுவர் சான்றிதழைப் பெற பிசிசிஐயிடம் பரிந்துரையைக் கோர வேண்டும்.

ICC Umpire (AFP Photo)
ICC Umpire (AFP Photo)

இந்தியாவில் கிரிக்கெட் அம்பயர் சான்றிதழ்:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி டிராபி, இரானி கோப்பை போன்ற உள்நாட்டு மற்றும் தேசிய போட்டிகளில் நடுவராக செயல்பட்ட கிரிக்கெட் நடுவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சான்றிதழ்களையும் வழங்குகிறது.

இந்தியாவில் நடுவர் பயிற்சி:

இந்தியாவில் நடுவர் பயிற்சி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமைந்துள்ள பிசிசிஐ நடுவர் அகாடமியால் வழங்கப்படுகிறது. மாநில கிரிக்கெட் அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அங்கு வழங்கப்படுகின்றன. மேலும் முதல்தர போட்டிகளில் தலைமை நடுவர்களுக்கான சான்றிதழ் தேர்வுகளையும் தேசிய கிரிக்கெட் அகாடமி நடத்துகிறது.

Indian Cricket Umpire Nitin Menon (AFP Photo)
Indian Cricket Umpire Nitin Menon (AFP Photo)

ஐசிசியில் இந்திய நடுவர்கள்:

நிதின் மேனன், கே.என்.ஆனந்த் பத்மநாபன், ஜெயராமன் மதன்கோபால், ரோஹன் பண்டிட், வரீந்தர் சர்மா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவர் குழுவில் இந்தியா சார்பில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை? - India World Test Championship

ஐதராபாத்: உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் அது பிசிசிஐ தான், அதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலகளவில் கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக மாற முயற்சித்து அதில் தோல்வி அடைகிறீர்களா, அப்படியன்றால் இந்த செய்தி உங்களுக்குத் தான்.

அம்பயர் ஆவதன் மூலம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு இணையாக பெயர், புகழ், பணம் என அனைத்தையும் சம்பாதிக்கலாம். மேலும், இந்திய அரசின் ஏ கிரேட் அதிகாரிக்கு வழங்கப்படும் ஊதியத்தை காட்டிலும் கிரிக்கெட் அம்பயருக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது அதிகம். அதேநேரம் அரசு வேலையை காட்டிலும் அம்பயராவது என்பது சற்று எளிதானது தான் என்றால் வியப்பாகத் தான் இருக்கும்.

Representative image
Representative image (AFP Photo)

கிரிக்கெட்டின் இதயம் இந்தியா:

மற்ற நாடுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. அது ஒரு மதம், திருவிழா போன்று மக்கள் வெற்றிகளை கொண்டாடி வருகின்றனர். இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு உருவாகி இருந்தாலும், அதிக கிரிக்கெட் வீரர்கள், அதிகளவில் இளைஞர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தான் காணப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பும் இளைஞர்கள் மைதானத்தில் பந்துவீசுவது அல்லது பேட்டிங் செய்வது மூலமாகத் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் அல்ல. மாறாக அம்பயர் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஐசிசி அம்பயர் சம்பளம் (Umpire salary) எவ்வளவு?

அம்பயர்கள் இரண்டு வகைகளாக உள்ளனர். ஒன்று அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் கீழ் வருபவர்கள். மற்றவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கீழ் நியமிக்கப்படுபவர்கள். இதில் நாடுகளின் கிரிக்கெட் வாரிய அம்பயர்களை விட ஐசிசியின் நடுவர்கள் அதிகளவில் ஊதியம் பெறுகின்றனர்.

ஐசிசியின் தரம் வாய்ந்த போட்டி நடுவர்கள் ஆண்டுக்கு 66 லட்ச ரூபாய் முதல் 1 கோடியே 67 லட்ச ரூபாய் வரை ஊதியமாக பெறுகின்றனர். இதில் போட்டிக் கட்டணம், மற்ற சலுகைகள் என அனைத்தும் அடங்கும். இது தவிர ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் அம்பயர்கள் அதிகளவில் சம்பாதிக்கின்றனர்.

டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடுவரின் ஊதியம் 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். அதேநேரம் டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஐசிசி நடுவரின் ஊதியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். இதில் நடுவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் வேறுபடும். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் அலீம் தர் (Aleem Dar) தான் அதிக சம்பளம் வாங்கும் நடுவர் ஆவார்.

Salary and qualification of cricket umpire (AFP Photo)
cricket umpire Representative image (AFP Photo)

பிசிசிஐ நடுவர் சம்பளம் எவ்வளவு?:

பிசிசிஐ-யை பொறுத்தவரை அம்பயர்களுக்கு நிலையான ஊதியம் என்பது கிடையாது. அவர்கள் பல்வேறு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு, வயது, அனுபவம், படிப்பு ஆகியவற்றின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் ஏ+, ஏ, பி மற்றும் சி ஆகிய அடுக்குகளாக அம்பயர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் ஏ+ மற்றும் ஏ பிரிவில் உள்ள நடுவர்களுக்கு நாளொன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பி மற்றும் சி பிரிவில் உள்ள அம்பயர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் அவர்களது பணித் திறமை ஆகியவை கணக்கிடப்பட்டு ஐசிசியின் எலைட் அம்பயர் பிரிவில் சேர்க்கப்படுவர். அதன் மூலம் அவர்கள் அதிக சம்பளம் பெற முடியும்.

அம்பயராக என்ன தகுதி தேவை?

அம்பயராக கிரிக்கெட் விளையாடி இருக்க வேண்டிய அனுபவம் வேண்டியதில்லை. ஆனால், கிரிக்கெட்டை பற்றி அனைத்தையும் அறிந்து இருக்க வேண்டும். என்னென்ன விதிமுறைகள் உள்ளன, துல்லியமாக முடிவு எடுப்பது, எந்த அணியையும் சாராமல் நடப்பது, நல்ல பேச்சுத் திறன், உடல் தகுதி உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அம்பயராவது எப்படி?

படி 1: மாநில கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.

படி 2: ஸ்டேட் அசோசியேஷன் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்று, அம்பயர் சான்றிதழுக்கான திட்டத்தின் BCCI நடுவர் அகாடமியில் சேர வேண்டும்.

படி 3: BCCI நடுவர் அகாடமி நடத்தும் நடுவர் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

படி 4: மாநில கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு நடுவர் சான்றிதழைப் பெற வேண்டும்.

படி 5: மாநில அளவில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் நடுவர் அனுபவத்தைப் பெற்று, பின்னர் BCCI நிலை 1 தேர்வில் விண்ணப்பித்து வெற்றி பெற வேண்டும்.

படி 6: பிசிசிஐயில் நடுவராக ஆவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ நடத்தும் லெவல் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு முன் 3 நாள் பயிற்சி வகுப்பையும் பிசிசிஐ நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மூலம் தேர்வின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பாடநெறி கோட்பாடுகள் வழங்கப்படுகின்றன.

அதில் அவர்களுக்கு நடுவரைப் பற்றி கற்பிக்கப்படுகிறது. பின்னர் நேர்காணல் நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் லெவல் 2 தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் பிசிசிஐ-யில் நடுவர்களாக சேரலாம்.

படி 7: அம்பயரிங்கில் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பினால், சர்வதேசப் போட்டிகளில் நடுவராக இருப்பதற்காக ஐசிசியின் நடுவர் சான்றிதழைப் பெற பிசிசிஐயிடம் பரிந்துரையைக் கோர வேண்டும்.

ICC Umpire (AFP Photo)
ICC Umpire (AFP Photo)

இந்தியாவில் கிரிக்கெட் அம்பயர் சான்றிதழ்:

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி டிராபி, இரானி கோப்பை போன்ற உள்நாட்டு மற்றும் தேசிய போட்டிகளில் நடுவராக செயல்பட்ட கிரிக்கெட் நடுவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சான்றிதழ்களையும் வழங்குகிறது.

இந்தியாவில் நடுவர் பயிற்சி:

இந்தியாவில் நடுவர் பயிற்சி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அமைந்துள்ள பிசிசிஐ நடுவர் அகாடமியால் வழங்கப்படுகிறது. மாநில கிரிக்கெட் அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நடுவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அங்கு வழங்கப்படுகின்றன. மேலும் முதல்தர போட்டிகளில் தலைமை நடுவர்களுக்கான சான்றிதழ் தேர்வுகளையும் தேசிய கிரிக்கெட் அகாடமி நடத்துகிறது.

Indian Cricket Umpire Nitin Menon (AFP Photo)
Indian Cricket Umpire Nitin Menon (AFP Photo)

ஐசிசியில் இந்திய நடுவர்கள்:

நிதின் மேனன், கே.என்.ஆனந்த் பத்மநாபன், ஜெயராமன் மதன்கோபால், ரோஹன் பண்டிட், வரீந்தர் சர்மா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடுவர் குழுவில் இந்தியா சார்பில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை? - India World Test Championship

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.