ETV Bharat / opinion

வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி சரிவை சந்திக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 6:42 PM IST

அடுத்த நிதி ஆண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாக ஏன் சரிவை சந்திக்கும் என கிருஷ்ணானந்த் விளக்குகிறார்.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6 புள்ளி 5 சதவீதமாக சரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி வகிதம் 7 புள்ளி 3 என்ற அளவை எட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அடையாளத்தை தக்கவைக்க உதவும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நடப்பாண்டில் பதிவு செய்யக்கூடிய விரைவான வளர்ச்சியைக் குறைக்கும் பல காரணிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நீடித்த மூலதன செலவு, ஆரோக்கியமான பெருநிறுவன செயல்திறன், தனியார் மூலதன செலவினங்கள் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள் ஆகியவை இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தக்கவைக்க உதவுகின்றன.

இருப்பினும், பலவீனமான ஏற்றுமதி மற்றும் மொத்த விலைக் குறியீடு போன்ற பிற காரணிகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மிதமான பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரநிர்ணய மற்றும் ஆராய்ச்சுஇ நிறுவனமான பிட்ச் குரூப் ரேட்டிங் ஏஜென்சி வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையின் படி, இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 2025ஆம் ஆண்டு மார்ச் 31 முடிவடையும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவான 7 புள்ளி 3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு இடர்கள் இருந்த போதிலும், அரசாங்கத்தின் செலவீனங்கள், ஆரோக்கியமான கார்ப்பரேட் செயல்திறன், ஒதுக்கப்பட்ட கார்ப்பரேட் மற்றும் வங்கித் துறை இருப்பு நிலைகள், உலகளாவிய பொருட்களின் விலையில் நிலவும் மாற்றம் மற்றும் புதிய தனியார் நிறுவனத்திற்கான வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி கண்ட போதிலும் இந்திய பொருளாதாரம் மீட்சி பாதையில் உள்ளது என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் ஈடிவி பாரத்திற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த பொருளாதார தேவைகள் பெரும்பாலும் அரசின் மூலதன செலவினங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் இந்திய ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோல் நாட்டில் தற்போதைய நுகர்வுத் தேவை என்பது இன்னும் 50 சதவீத வருமான வரம்பிற்கு உட்பட்ட குடும்பங்களால் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2023 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் நுகர்வோர் பிரிவு வெறும் 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ந்து உள்ளது. இந்தியாவின் உயர் பொருளாதார வளர்ச்சி என்பது, அதிகரித்த அரசு மூலதன செலவினங்களின் விளைவுகளால் ஏற்படும் நிலையில், அது பெரும்பாலும் தொழில்துறை பிரிவுகளான மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களில் காணப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் 9வது மாதத்தில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 7 சதவீதம் மற்றும் 10 புள்ளி 4 சதவீதம் என்ற அளவில் பதிவாகி உள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் பலவீனமான ஏற்றுமதி துறையாகும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அது மேம்பட்ட பொருளாதாரங்களின் வளர்ச்சி மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் புவிசார் அரசியலை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக 2024-25 நிதியாண்டில் கூட உலகளாவிய ஏற்றுமதியில் பல்வேறு இடையூறுகளை இந்தியா எதிர்கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதத்தில் 0.14 சதவீத சரிவை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நிதியாண்டில் மொத்த மதிப்பு கூட்டு விகிதம் மற்றும் கார்ப்பரேட் லாபம் ஆகியவற்றின் தாக்கத்தால் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என இந்திய ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் என்பது, பெயரளவான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் இருந்து மொத்த விலைவாசி உயர்வை கணக்கிடுவதன் மூலம் கிடைக்கிறது. அதாவது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் பெருக்க முடியும்.

உதாரணமாக 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலாண்டில் விலைவாசி உயர்வு அதிகரித்து காணப்படும் நிலையில் அதே ஆண்டின் நவம்பர் மாதம் பற்றாக்குறை என்பது அதிகரித்து காணப்படும். இந்தியா ரேட்டிங்ஸ் ஏஜென்சி அறிக்கையின் படி, தனியார் நுகர்வு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேவையான 60 சதவிகிதம் பெறும்பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் ஆண்டில் 6 புள்ளி 1 சதவிகிதம் வளர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் தனியார் நுகர்வு செலவினம் என்பது சரிவை சந்தித்து உள்ளது. நிதி ஆண்டின் முடிவில் 4 புள்ளி 4 சதவீதம் என்ற வளர்ச்சியில் தனியார் நுகர்வு செலவினம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் நீடித்த எதிர்காலத்தை திட்டமாக கொண்டு உள்ள இந்தியாவில், ஊழியர்களின் ஊதிய வளர்ச்சி விகிதம் என்பது அதன் வளர்ச்சி வேகத்தை தக்கவைக்க தனியார் நுகர்வு அடிப்படை மற்றும் அதிக வருமானம் கொண்ட குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் சாத்தியமா? சர்வதேச அரசியல், பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன?

ஐதராபாத் : அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 6 புள்ளி 5 சதவீதமாக சரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி வகிதம் 7 புள்ளி 3 என்ற அளவை எட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற அடையாளத்தை தக்கவைக்க உதவும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நடப்பாண்டில் பதிவு செய்யக்கூடிய விரைவான வளர்ச்சியைக் குறைக்கும் பல காரணிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசின் நீடித்த மூலதன செலவு, ஆரோக்கியமான பெருநிறுவன செயல்திறன், தனியார் மூலதன செலவினங்கள் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள் ஆகியவை இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தக்கவைக்க உதவுகின்றன.

இருப்பினும், பலவீனமான ஏற்றுமதி மற்றும் மொத்த விலைக் குறியீடு போன்ற பிற காரணிகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மிதமான பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தரநிர்ணய மற்றும் ஆராய்ச்சுஇ நிறுவனமான பிட்ச் குரூப் ரேட்டிங் ஏஜென்சி வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையின் படி, இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 2025ஆம் ஆண்டு மார்ச் 31 முடிவடையும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவான 7 புள்ளி 3 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு இடர்கள் இருந்த போதிலும், அரசாங்கத்தின் செலவீனங்கள், ஆரோக்கியமான கார்ப்பரேட் செயல்திறன், ஒதுக்கப்பட்ட கார்ப்பரேட் மற்றும் வங்கித் துறை இருப்பு நிலைகள், உலகளாவிய பொருட்களின் விலையில் நிலவும் மாற்றம் மற்றும் புதிய தனியார் நிறுவனத்திற்கான வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி கண்ட போதிலும் இந்திய பொருளாதாரம் மீட்சி பாதையில் உள்ளது என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் ஈடிவி பாரத்திற்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த பொருளாதார தேவைகள் பெரும்பாலும் அரசின் மூலதன செலவினங்களில் இருந்தே மேற்கொள்ளப்படுவதால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் இந்திய ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோல் நாட்டில் தற்போதைய நுகர்வுத் தேவை என்பது இன்னும் 50 சதவீத வருமான வரம்பிற்கு உட்பட்ட குடும்பங்களால் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2023 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் நுகர்வோர் பிரிவு வெறும் 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ந்து உள்ளது. இந்தியாவின் உயர் பொருளாதார வளர்ச்சி என்பது, அதிகரித்த அரசு மூலதன செலவினங்களின் விளைவுகளால் ஏற்படும் நிலையில், அது பெரும்பாலும் தொழில்துறை பிரிவுகளான மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்களில் காணப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் 9வது மாதத்தில் இதன் வளர்ச்சி விகிதம் முறையே 7 சதவீதம் மற்றும் 10 புள்ளி 4 சதவீதம் என்ற அளவில் பதிவாகி உள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் பலவீனமான ஏற்றுமதி துறையாகும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அது மேம்பட்ட பொருளாதாரங்களின் வளர்ச்சி மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக ஸ்திரத்தன்மையற்ற சூழல் மற்றும் புவிசார் அரசியலை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக 2024-25 நிதியாண்டில் கூட உலகளாவிய ஏற்றுமதியில் பல்வேறு இடையூறுகளை இந்தியா எதிர்கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதத்தில் 0.14 சதவீத சரிவை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நிதியாண்டில் மொத்த மதிப்பு கூட்டு விகிதம் மற்றும் கார்ப்பரேட் லாபம் ஆகியவற்றின் தாக்கத்தால் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என இந்திய ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் என்பது, பெயரளவான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் இருந்து மொத்த விலைவாசி உயர்வை கணக்கிடுவதன் மூலம் கிடைக்கிறது. அதாவது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் பெருக்க முடியும்.

உதாரணமாக 2023 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலாண்டில் விலைவாசி உயர்வு அதிகரித்து காணப்படும் நிலையில் அதே ஆண்டின் நவம்பர் மாதம் பற்றாக்குறை என்பது அதிகரித்து காணப்படும். இந்தியா ரேட்டிங்ஸ் ஏஜென்சி அறிக்கையின் படி, தனியார் நுகர்வு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேவையான 60 சதவிகிதம் பெறும்பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் ஆண்டில் 6 புள்ளி 1 சதவிகிதம் வளர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில் தனியார் நுகர்வு செலவினம் என்பது சரிவை சந்தித்து உள்ளது. நிதி ஆண்டின் முடிவில் 4 புள்ளி 4 சதவீதம் என்ற வளர்ச்சியில் தனியார் நுகர்வு செலவினம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் நீடித்த எதிர்காலத்தை திட்டமாக கொண்டு உள்ள இந்தியாவில், ஊழியர்களின் ஊதிய வளர்ச்சி விகிதம் என்பது அதன் வளர்ச்சி வேகத்தை தக்கவைக்க தனியார் நுகர்வு அடிப்படை மற்றும் அதிக வருமானம் கொண்ட குழுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் சாத்தியமா? சர்வதேச அரசியல், பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.