ETV Bharat / lifestyle

அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்கு நீங்க இப்படி கழுவினால் போதும்..இனி, கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை! - HOW TO CLEAN AGAL VILAKKU

டிடர்ஜெண்ட் கலந்த நீருடன் சிறிது வினிகர் சேர்த்து அகல் விளக்குகளை கழுவினால், விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்கு முற்றிலுமாக நீங்கும். கார்த்திகை தீபத்திற்கு பின் விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை நீக்க டிப்ஸ்கள் இதோ!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 13, 2024, 4:47 PM IST

கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றி விட்டீர்களா? கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றிய அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்காக இருக்கிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்து அகல் விளக்கை சுத்தம் செய்து பாருங்கள். எண்ணெய் பிசுக்கு நீங்கி, கடையில் இருந்து வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.

  • கல் உப்பு: ஒரு தேக்கரண்டி கல் உப்புடன் மூன்று தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், இதை அகல் விளக்கின் அனைத்து பகுதிகளில் நன்கு படுகிற அளவிற்கு தடவி 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள். பின்னர், இந்த விளக்குகளை தண்ணீரில் கழுவி காட்டன் துணியை பயன்படுத்தி துடைத்து எடுத்தால் விளக்கில் உள்ள கறைகள் எல்லாம் நீங்கி இருப்பதை பார்க்க முடியும்.
  • டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் வினிகர்: அகல் விளக்குகளில் உள்ள தூசி மற்றும் கிரீஸ் நீங்குவதற்கு, 1 கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் டிடெர்ஜெண்ட் பவுடர் மற்றும் ஒன்றரை டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலக்கவும். பின்னர், ஒரு டூத் பிரஷை பயன்படுத்தி விளக்குகள் மீது தடவி லேசாக தேய்த்து வர விளக்கு புதியது போலாகிவிடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
  • எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா: விளக்குகளை அணைத்த பின்னர், முதலில் டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி விளக்குகளை நன்றாக துடைக்கவும். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர், அதில் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், ஒரு எழும்பிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழத்தின் தோலையும் கொதிக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுங்கள்.

இப்போது, அகல் விளக்குகளை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். (தண்ணீர் கொதிக்கும் போதே விளக்கில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு பிரிந்து வருவது தெரியும்). இப்போது, இந்த பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு ஒதுக்கி வைத்து விடுங்கள்.

அடுத்ததாக, விளக்கை குழாய் தண்ணீரில் காட்டி கழுவவும். இறுதியாக, டிஸ்யூ அல்லது காட்டன் துணியால் இந்த விளக்குகளை துடைத்து எடுத்தால் விளக்குகளில் இருந்த எண்ணெய் பிசுக்கு நீங்கி புதியது போல் இருக்கும். கார்த்திகை முடிந்ததும் இந்த முறையை பயன்படுத்தி விளக்குகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைய்யுங்கள்.

  • இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து விளக்குகளை கழிவிய பின்னர், நன்கு காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட்டால், அடுத்த வருடம் தீபாவளிக்கு விளக்குகளை நீங்கள் எடுக்கும் போது புதிது போலவே ஜொலிக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

அகல் விளக்கில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க:

  1. விளக்கேற்றிய பின் அகல் விளக்கிள் இருந்து எண்ணெய் கசிந்தால், விளக்கேற்றும் போதும் விளக்கின் அடியில் அரச இலை அல்லது வெற்றிலையை வைய்யுங்கள். இப்படி செய்வதால் தரை எண்ணெய் பிசுக்காவதை தடுக்கலாம்.
  2. இல்லையென்றால், வீட்டில் இருக்கும் நக பாலிஷை விளக்கின் அடியில் நன்றாக தேய்த்து காய வைத்து விளாக்கேற்றினால், எண்ணெய் கசிவு ஏற்படாது.

இதையும் படிங்க: பூஜை பாத்திரம் பளபளக்க..'இந்த' பொடியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்! - POOJA VESSELS CLEANING IN TAMIL

கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்றி விட்டீர்களா? கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றிய அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்காக இருக்கிறதா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ செய்து அகல் விளக்கை சுத்தம் செய்து பாருங்கள். எண்ணெய் பிசுக்கு நீங்கி, கடையில் இருந்து வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.

  • கல் உப்பு: ஒரு தேக்கரண்டி கல் உப்புடன் மூன்று தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், இதை அகல் விளக்கின் அனைத்து பகுதிகளில் நன்கு படுகிற அளவிற்கு தடவி 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள். பின்னர், இந்த விளக்குகளை தண்ணீரில் கழுவி காட்டன் துணியை பயன்படுத்தி துடைத்து எடுத்தால் விளக்கில் உள்ள கறைகள் எல்லாம் நீங்கி இருப்பதை பார்க்க முடியும்.
  • டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் வினிகர்: அகல் விளக்குகளில் உள்ள தூசி மற்றும் கிரீஸ் நீங்குவதற்கு, 1 கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் டிடெர்ஜெண்ட் பவுடர் மற்றும் ஒன்றரை டீஸ்பூன் வினிகர் சேர்த்து கலக்கவும். பின்னர், ஒரு டூத் பிரஷை பயன்படுத்தி விளக்குகள் மீது தடவி லேசாக தேய்த்து வர விளக்கு புதியது போலாகிவிடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)
  • எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா: விளக்குகளை அணைத்த பின்னர், முதலில் டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி விளக்குகளை நன்றாக துடைக்கவும். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர், அதில் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், ஒரு எழும்பிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை பழத்தின் தோலையும் கொதிக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுங்கள்.

இப்போது, அகல் விளக்குகளை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். (தண்ணீர் கொதிக்கும் போதே விளக்கில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு பிரிந்து வருவது தெரியும்). இப்போது, இந்த பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு ஒதுக்கி வைத்து விடுங்கள்.

அடுத்ததாக, விளக்கை குழாய் தண்ணீரில் காட்டி கழுவவும். இறுதியாக, டிஸ்யூ அல்லது காட்டன் துணியால் இந்த விளக்குகளை துடைத்து எடுத்தால் விளக்குகளில் இருந்த எண்ணெய் பிசுக்கு நீங்கி புதியது போல் இருக்கும். கார்த்திகை முடிந்ததும் இந்த முறையை பயன்படுத்தி விளக்குகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைய்யுங்கள்.

  • இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து விளக்குகளை கழிவிய பின்னர், நன்கு காய வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட்டால், அடுத்த வருடம் தீபாவளிக்கு விளக்குகளை நீங்கள் எடுக்கும் போது புதிது போலவே ஜொலிக்கும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

அகல் விளக்கில் எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க:

  1. விளக்கேற்றிய பின் அகல் விளக்கிள் இருந்து எண்ணெய் கசிந்தால், விளக்கேற்றும் போதும் விளக்கின் அடியில் அரச இலை அல்லது வெற்றிலையை வைய்யுங்கள். இப்படி செய்வதால் தரை எண்ணெய் பிசுக்காவதை தடுக்கலாம்.
  2. இல்லையென்றால், வீட்டில் இருக்கும் நக பாலிஷை விளக்கின் அடியில் நன்றாக தேய்த்து காய வைத்து விளாக்கேற்றினால், எண்ணெய் கசிவு ஏற்படாது.

இதையும் படிங்க: பூஜை பாத்திரம் பளபளக்க..'இந்த' பொடியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்! - POOJA VESSELS CLEANING IN TAMIL

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.