லண்டன்: நாட்டை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்று பிரிட்டனின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கியொ் ஸ்டாா்மா் கூறியுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று (ஜுலை 4) நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை முதல் முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க, குறைந்தபட்சம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளதுடன், 200-க்கும் அதிகமான இடங்களில் முன்னணியும் வகித்து வருகிறது. இதனால், அக்கட்சியின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டது. இதையடுத்து தொழிலாளர் கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர், பிரிட்டனின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
"கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, நாட்டை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்று கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
We said we will stop the chaos. And we will.
— Keir Starmer (@Keir_Starmer) July 5, 2024
We said we will turn the page. And we have.
The work of change begins today. pic.twitter.com/nROZuPdxNj