ETV Bharat / health

வீட்டிலே பிறந்த குழந்தை.. வலிப்பால் அவதிப்பட்ட தாய்.. மதுரை ராஜாஜி மருத்துவமனை செய்த அசாத்தியமான சாதனை! - Guillain Barre syndrome

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 6:48 PM IST

Rare Disease Among Pregnant ladies: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ராஜ்கனி அரிய வகை நோயான குயில்லன் பார்ரே நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த வெற்றிகரமான சிகிச்சை குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தர்மராஜ் விளக்கியுள்ளார்.

ராஜ்கனி , மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சை குழு
ராஜ்கனி , மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சை குழு (Credits- ETV Bharat Tamil Nadu)

மதுரை: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட Guillain-Barre Syndrome என்ற நோய்க்கு உரிய முறையில் மருந்துகள் வழங்கி, சிகிச்சை அளித்து முழுவதும் குணமடைந்துள்ளார். இதனையடுத்து, தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தர்மராஜ் கூறியுள்ளார்.

டாக்டர். தர்மராஜ் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், டாக்டர் தர்மராஜ் கூறுகையில், “மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த 26 வயதுடைய பெண் ராஜ்கனி, தன் கணவரின் பணி நிமித்தம் காரணமாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பகுதிக்கு கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் இடம் பெயர்ந்தார். அப்போது அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று காலை 4.00 மணியளவில் ராஜ்கனிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை (எடை - 2.3 கிலோ) பிறந்தது.

அடுத்த நாள் (ஜூன் 30) அதிகாலை 5.00 மணி அளவில் வலிப்பு வந்ததன் காரணமாக நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக வலிப்பு நோய் (Postpartum Eclampsia) எனப்படும் நோய் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்கை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் ராஜ்கனிக்கு இரண்டு கால்கள் மற்றும் கைகள் செயல்படாமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பின், பல்வேறு மருத்துவ பரிசோதனைக்களுக்குப் பிறகு, அவருக்கு குயில்லன் பார்ரே நோய்த்தாக்கம் (Guillian Barre syndrome) GBS- AMSAN எனப்படும் நோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, IVIG எனப்படும் உயர்சிகிச்சைக்கான மருந்துகள் 5 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து, மருத்துவத்துறை பொது பயிற்சியாளர்கள் கண்காணிப்பின் கீழ் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சையின் பலனாக தற்போது நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் முற்றிலும் நீங்கி கை, கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மேலும், இந்த நோயானது ஒரு லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும் அரிய வகை நோய் ஆகும். அதனால் இதற்குரிய உயர் சிகிச்சை உரிய நேரத்தில் செய்தால் மட்டுமே நோயாளியின் நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து முழுவதுமாக விடுபடமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மருந்து துறை தலைவர் டாக்டர் நடராஜன், மருத்துவ சிகிச்சை கண்காணிப்பாளர் டாக்டர். குமரவேல், மருந்து துறை உதவி பேராசிரியர் டாக்டர்.சுரேஷ் குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) டாக்டர். ஸ்ரீலதா ஆகியோர் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!

மதுரை: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட Guillain-Barre Syndrome என்ற நோய்க்கு உரிய முறையில் மருந்துகள் வழங்கி, சிகிச்சை அளித்து முழுவதும் குணமடைந்துள்ளார். இதனையடுத்து, தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் தர்மராஜ் கூறியுள்ளார்.

டாக்டர். தர்மராஜ் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும், டாக்டர் தர்மராஜ் கூறுகையில், “மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த 26 வயதுடைய பெண் ராஜ்கனி, தன் கணவரின் பணி நிமித்தம் காரணமாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பகுதிக்கு கணவருடன் ஒரு வருடத்திற்கு முன் இடம் பெயர்ந்தார். அப்போது அவர் 3-வது முறையாக கர்ப்பமடைந்த நிலையில், கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று காலை 4.00 மணியளவில் ராஜ்கனிக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை (எடை - 2.3 கிலோ) பிறந்தது.

அடுத்த நாள் (ஜூன் 30) அதிகாலை 5.00 மணி அளவில் வலிப்பு வந்ததன் காரணமாக நெடுகண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக வலிப்பு நோய் (Postpartum Eclampsia) எனப்படும் நோய் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்கை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ஆம் தேதி இரவு 8.00 மணியளவில் ராஜ்கனிக்கு இரண்டு கால்கள் மற்றும் கைகள் செயல்படாமலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

பின், பல்வேறு மருத்துவ பரிசோதனைக்களுக்குப் பிறகு, அவருக்கு குயில்லன் பார்ரே நோய்த்தாக்கம் (Guillian Barre syndrome) GBS- AMSAN எனப்படும் நோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, IVIG எனப்படும் உயர்சிகிச்சைக்கான மருந்துகள் 5 நாட்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து, மருத்துவத்துறை பொது பயிற்சியாளர்கள் கண்காணிப்பின் கீழ் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சையின் பலனாக தற்போது நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் முற்றிலும் நீங்கி கை, கால்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த நிலையில், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். மேலும், இந்த நோயானது ஒரு லட்சம் பேரில் 1.2 பேருக்கு மட்டுமே வரும் அரிய வகை நோய் ஆகும். அதனால் இதற்குரிய உயர் சிகிச்சை உரிய நேரத்தில் செய்தால் மட்டுமே நோயாளியின் நரம்பு மண்டல பாதிப்பில் இருந்து முழுவதுமாக விடுபடமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மருந்து துறை தலைவர் டாக்டர் நடராஜன், மருத்துவ சிகிச்சை கண்காணிப்பாளர் டாக்டர். குமரவேல், மருந்து துறை உதவி பேராசிரியர் டாக்டர்.சுரேஷ் குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் (ஆர்எம்ஓ) டாக்டர். ஸ்ரீலதா ஆகியோர் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தாவரங்களில் இருந்து தாய்ப்பாலா? - கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.