ETV Bharat / entertainment

"நடிகை சமந்தா விவகாரத்திற்கு மாஜி முதல்வர் மகனே காரணம்" பெண் அமைச்சர் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டாவில் பொங்கி எழுந்த சமந்தா! - Samantha about divorce issue

author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

நாக சைதன்யாவுடன் விவாகரத்து குறித்து பேசியதற்கு நடிகை சமந்தா, நாகர்ஜுனா ஆகியோர் கண்டனம் தெரிவித்த நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா, அமைச்சர் கொண்டா சுரேகா புகைப்படம்
நடிகை சமந்தா, அமைச்சர் கொண்டா சுரேகா புகைப்படம் (Credits - IANS)

ஹைதராபாத்: நடிகை சமந்தா, நாக சைதன்யா பிரிவிற்கு தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், தெலங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, ”சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம்” என கூறியுள்ளார். இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், “பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னையை எதிர்கொண்டு, மீண்டு வருவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. இந்த பயணத்தில் நான் பெருமை கொள்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகா, ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய கருத்து தவறானது என உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஒரு தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனது விவாகரத்து என்பது சொந்த விஷயம். அதனைப் பற்றி யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து எங்களது இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. அரசியல் விவகாரத்தில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் அரசியல் விஷயத்தில் தலையிட மாட்டேன், கடைசி வரை அவ்வாறே இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு சமந்தா கண்டனம்
அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு சமந்தா கண்டனம் (Credits - samantharuthprabhuoffl instagram account)

மேலும், அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு நடிகர் நாகர்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் நாகர்ஜுனா வெளியிட்ட பதிவில், “அமைச்சர் கொண்டா சுரேகா கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம். தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'Leading Light' ஆவணப்படம் எடுத்து விருது வென்ற சூர்யா மகள் - ஜோதிகா நெகிழ்ச்சி! - leading light

இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “எனது கருத்து சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால், உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஹைதராபாத்: நடிகை சமந்தா, நாக சைதன்யா பிரிவிற்கு தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், தெலங்கானா வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா, ”சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பெற்றதற்கு பிஆர்எஸ் கட்சி செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம்” என கூறியுள்ளார். இந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், “பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னையை எதிர்கொண்டு, மீண்டு வருவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. இந்த பயணத்தில் நான் பெருமை கொள்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகா, ஒரு அமைச்சராக நீங்கள் கூறிய கருத்து தவறானது என உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஒரு தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனது விவாகரத்து என்பது சொந்த விஷயம். அதனைப் பற்றி யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து எங்களது இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. அரசியல் விவகாரத்தில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் அரசியல் விஷயத்தில் தலையிட மாட்டேன், கடைசி வரை அவ்வாறே இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு சமந்தா கண்டனம்
அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு சமந்தா கண்டனம் (Credits - samantharuthprabhuoffl instagram account)

மேலும், அமைச்சர் கொண்டா சுரேகா கருத்திற்கு நடிகர் நாகர்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா அக்கினேனி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் நாகர்ஜுனா வெளியிட்ட பதிவில், “அமைச்சர் கொண்டா சுரேகா கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம். தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'Leading Light' ஆவணப்படம் எடுத்து விருது வென்ற சூர்யா மகள் - ஜோதிகா நெகிழ்ச்சி! - leading light

இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “எனது கருத்து சமந்தா மற்றும் அவரது ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால், உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.