ETV Bharat / entertainment

"இப்படிப்பட்ட நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை" - அபர்ணதியை விளாசிய சுரேஷ் காமாட்சி.. பின்னணி என்ன? - SUresh kamatchi slams abarnathi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 7:20 AM IST

SUresh kamatchi slams abarnathi: திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்த போது, புரமோஷனுக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன், இல்லையெனில் வரமாட்டேன் என்று சொன்னதாகவும், தமிழ் சினிமாவுக்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை எனவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

சுரேஷ் காமாட்சி, அபர்ணதி
சுரேஷ் காமாட்சி, அபர்ணதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வி6 பிலிம்ஸ் - வேலாயுதம் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கும் படம் நாற்கரப்போர் (Narkarappor). லிங்கேஷ், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய சுரேஷ் காமாட்சி, "இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இங்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம். நம் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பட்ஜெட்டை வைத்து சிறிய படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை. சிறிய படங்களே கோடிக்கணக்கில் கலெக்‌ஷனை கொடுத்திருக்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்கு நடிகை அபர்ணதி வராததை சுட்டிக்காட்டி பேசிய அவர், படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்த போது, புரமோஷனுக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன். இல்லையெனில் வரமாட்டேன் என்று சொன்னார். மேலும் தன்னுடன் மேடையில் இருக்க வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் சொன்னதால் அது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அவர் வரவில்லை கேட்டதற்கு அவுட்டோரில் இருப்பதாக சொன்னார், அவங்க அவுட்டோர்லயே இருக்கட்டும். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை. இது மிகவும் வருத்தமானது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், வணங்கான் படத்தில் எனக்கும் பாலா அண்ணனுக்கும் ஏதோ பிரச்சினை என்று ஒரு வார இதழில் தொடர்ந்து செய்தி வருகிறது. நீங்கள் வந்து அந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள். பாலாவை வைத்து படம் எடுத்தவர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க. நீங்க எப்போ ரோட்டுக்கு வருவீங்க என்று அந்த வார இதழ் செய்தியாளர் கேட்டது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது எனது ஆதங்கம். அதை இங்கே வெளிப்படுத்துகிறேன் என்றும், கேள்வியை சரியாக கேளுங்கள்" என்றும் கூறினார்.

சமீப காலமாக நடிகர்கள் தனது படத்தின் புரொமோஷனுக்கு வராமல் இருப்பது தொடர்கதையாக இருக்கிறது.‌ அசோக் செல்வன் தனது படத்தின் புரொமோஷனுக்கு வரமறுத்ததாக தயாரிப்பாளர் திருமலை சமீபத்தில் ஆதங்கத்துடன் பேசினார். தற்போது நடிகை அபர்ணதியும் இதுபோன்று செய்துள்ளது தமிழ் சினிமாவில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" - உயர் நீதிமன்றம் கருத்து!

சென்னை: வி6 பிலிம்ஸ் - வேலாயுதம் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கும் படம் நாற்கரப்போர் (Narkarappor). லிங்கேஷ், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய சுரேஷ் காமாட்சி, "இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இங்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம். நம் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பட்ஜெட்டை வைத்து சிறிய படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை. சிறிய படங்களே கோடிக்கணக்கில் கலெக்‌ஷனை கொடுத்திருக்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்கு நடிகை அபர்ணதி வராததை சுட்டிக்காட்டி பேசிய அவர், படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்த போது, புரமோஷனுக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன். இல்லையெனில் வரமாட்டேன் என்று சொன்னார். மேலும் தன்னுடன் மேடையில் இருக்க வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் சொன்னதால் அது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அவர் வரவில்லை கேட்டதற்கு அவுட்டோரில் இருப்பதாக சொன்னார், அவங்க அவுட்டோர்லயே இருக்கட்டும். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை. இது மிகவும் வருத்தமானது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், வணங்கான் படத்தில் எனக்கும் பாலா அண்ணனுக்கும் ஏதோ பிரச்சினை என்று ஒரு வார இதழில் தொடர்ந்து செய்தி வருகிறது. நீங்கள் வந்து அந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள். பாலாவை வைத்து படம் எடுத்தவர்கள் ரோட்டுக்கு வந்துட்டாங்க. நீங்க எப்போ ரோட்டுக்கு வருவீங்க என்று அந்த வார இதழ் செய்தியாளர் கேட்டது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது எனது ஆதங்கம். அதை இங்கே வெளிப்படுத்துகிறேன் என்றும், கேள்வியை சரியாக கேளுங்கள்" என்றும் கூறினார்.

சமீப காலமாக நடிகர்கள் தனது படத்தின் புரொமோஷனுக்கு வராமல் இருப்பது தொடர்கதையாக இருக்கிறது.‌ அசோக் செல்வன் தனது படத்தின் புரொமோஷனுக்கு வரமறுத்ததாக தயாரிப்பாளர் திருமலை சமீபத்தில் ஆதங்கத்துடன் பேசினார். தற்போது நடிகை அபர்ணதியும் இதுபோன்று செய்துள்ளது தமிழ் சினிமாவில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" - உயர் நீதிமன்றம் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.