ETV Bharat / entertainment

மேடையில் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டதால் வெடித்த சர்ச்சை.. நடிகை அஞ்சலியின் ரியாக்‌ஷன் என்ன? - anjali balakrishna controversy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 1:20 PM IST

Anjali balakrishna controversy: கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்பட நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டதால் எழுந்த சர்ச்சை குறித்து நடிகை அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பாலகிருஷ்ணா, அஞ்சலி(கோப்புப்படம்)
பாலகிருஷ்ணா, அஞ்சலி(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

ஹைதராபாத்: ஹிட் பாகம் 1 (HIT) திரைப்பட புகழ் விஸ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் இன்று (மே 31) திரையரங்குகளில் வெளியானது 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்றிருந்த பாலகிருஷ்ணா நடிகைகள் அஞ்சலி, நேஹா இருவரையும் தள்ளி நிற்க சொன்னார்.

அவர்கள் மெதுவாக நகர்ந்த போது, நடிகையை அஞ்சலியை பாலகிருஷ்ணா வேகமாக நகருங்கள் என்று கூறியவாறு பிடித்து தள்ளினார். அப்போது கீழே விழ நேர்ந்த போது சுதாரித்து கொண்ட நடிகை அஞ்சலி, நடிகர் பாலகிருஷ்ணாவை பார்த்து சிரித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் டிரெண்டான நிலையில், நடிகை அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாலகிருஷ்ணா இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என விமர்சனம் செய்தனர்.

அதே வேளையில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் அவர் விளையாட்டாக செய்ததாக கூறி வருகின்றனர். இதனைதொடர்ந்து நடிகை அஞ்சலி இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நடிகர் பாலகிருஷ்ணா கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்பட நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. நடிகர் பாலகிருஷ்ணாவும், நானும் நல்ல மரியாதையுடன் நீண்ட கால நண்பர்களாக பயணித்து வருகிறோம். அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது சூர்யா 44 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! - Suriya 44 Shooting Video

ஹைதராபாத்: ஹிட் பாகம் 1 (HIT) திரைப்பட புகழ் விஸ்வக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் இன்று (மே 31) திரையரங்குகளில் வெளியானது 'கேங்ஸ் ஆஃப் கோதாவரி' திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்றிருந்த பாலகிருஷ்ணா நடிகைகள் அஞ்சலி, நேஹா இருவரையும் தள்ளி நிற்க சொன்னார்.

அவர்கள் மெதுவாக நகர்ந்த போது, நடிகையை அஞ்சலியை பாலகிருஷ்ணா வேகமாக நகருங்கள் என்று கூறியவாறு பிடித்து தள்ளினார். அப்போது கீழே விழ நேர்ந்த போது சுதாரித்து கொண்ட நடிகை அஞ்சலி, நடிகர் பாலகிருஷ்ணாவை பார்த்து சிரித்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் டிரெண்டான நிலையில், நடிகை அஞ்சலியை பிடித்து தள்ளிய பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாலகிருஷ்ணா இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்ளக் கூடாது என விமர்சனம் செய்தனர்.

அதே வேளையில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் அவர் விளையாட்டாக செய்ததாக கூறி வருகின்றனர். இதனைதொடர்ந்து நடிகை அஞ்சலி இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நடிகர் பாலகிருஷ்ணா கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்பட நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. நடிகர் பாலகிருஷ்ணாவும், நானும் நல்ல மரியாதையுடன் நீண்ட கால நண்பர்களாக பயணித்து வருகிறோம். அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டது நல்ல அனுபவமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வெளியானது சூர்யா 44 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! - Suriya 44 Shooting Video

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.