ETV Bharat / education-and-career

பொறியியல் மூன்றாம் சுற்று கலந்தாய்வு; மொத்தம் எத்தனை இடங்களுக்கு அனுமதி? - Engineering counselling 3rd round

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 12:06 PM IST

TN Engineering Admission: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிஇ, பிடெக் பொறியியல் படிப்புகளில் மூன்றாம் சுற்று கலந்தாய்விற்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 381 இடங்கள் அனுமதிக்கப்பட்டு, அதில் 51,920 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் கோப்புப்படம்
அண்ணா பல்கலைக்கழகம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 - 25 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் போன்ற இளங்கலை படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. தொடர்ந்து, பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக ஜூலை 22ஆம் தேதி தொடங்கி கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8,308 இடங்களும், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 இடங்களும் என 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், 3ம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகியது. கட்-ஆஃப் மதிப்பெண் 141.955 முதல் 77.50 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 25ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை பதிவு செய்தனர். அவர்களின் விருப்ப பட்டியலின் அடிப்படையில், 26ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், 28ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும். மேலும், பொதுப்பிரிவில் 92 ஆயிரத்து 999 மாணவர்கள் கலந்தாயில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 68,198 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 6,832 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு, 41,319 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 21,150 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் 1,062 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடும், 2,707 பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3ம் சுற்று கலந்தாய்வில் 51 ஆயிரத்து 920 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன" என அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பிஇ, பிடெக் போன்ற பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்விற்கு இன்று (ஆக.28) முதல் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என‌ அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு விவகாரம் - தமிழக அரசுக்கு கெடு வைத்த நீதிமன்றம்!

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2024 - 25 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் போன்ற இளங்கலை படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன. தொடர்ந்து, பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக ஜூலை 22ஆம் தேதி தொடங்கி கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8,308 இடங்களும், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 இடங்களும் என 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், 3ம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகியது. கட்-ஆஃப் மதிப்பெண் 141.955 முதல் 77.50 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 25ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை பதிவு செய்தனர். அவர்களின் விருப்ப பட்டியலின் அடிப்படையில், 26ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், 28ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும். மேலும், பொதுப்பிரிவில் 92 ஆயிரத்து 999 மாணவர்கள் கலந்தாயில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 68,198 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 6,832 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு, 41,319 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 21,150 மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் 1,062 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடும், 2,707 பேருக்கு கல்லூரியில் சேர்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3ம் சுற்று கலந்தாய்வில் 51 ஆயிரத்து 920 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன" என அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பிஇ, பிடெக் போன்ற பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்விற்கு இன்று (ஆக.28) முதல் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என‌ அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு விவகாரம் - தமிழக அரசுக்கு கெடு வைத்த நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.