ETV Bharat / bharat

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி.. "மேற்கத்திய நாடுகளுக்கு பொறாமை" - ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் கருத்து - Narendra Modi Russia visit

MODI VISIT TO MOSCOW: 5 ஆண்டுகளுக்கு பிறகு 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக  பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 12:12 PM IST

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் (கோப்புப் படம்)
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் (கோப்புப் படம்) (Credit - AP Photos)

டெல்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய தலைநகர், மாஸ்கோவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக புறப்பட்டார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, சர்வதேச அளவிலான பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், பொருளாதாரம், இயற்கை எரிவாயு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து மோடி பேசுவார் என கூறப்படுகிறது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா பயணம்: கடந்த 2019 ஆம் ஆண்டு விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"அடுத்த மூன்று நாட்கள் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவில் இருக்கும். இந்த பயணம் இரு நாடுகளிடையே உள்ள நட்புறவை மேம்படுத்தும், இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாற்றுவதற்கு ஆவலாக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையே இதுவரை 21 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது 28 இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய- ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய வருகையை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன, பொறாமை கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ள தெரிவித்துள்ள மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், பிரதமர் மோடியின் வருகை ரஷ்யா - இந்தியா இடையேயான உறவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியா பயணம்: ரஷ்ய பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார். ஏறத்தாழ 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரியா பயணத்தில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெட் பெலனை, பிரதமர் மோடி சந்திக்கிறார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மர் சந்திக்கிறார் பிரதமர் மோடி. பின்னர் இருவரும் இந்தியா-ஆஸ்திரியா வணிக தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

டெல்லி: இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய தலைநகர், மாஸ்கோவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக புறப்பட்டார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, சர்வதேச அளவிலான பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், பொருளாதாரம், இயற்கை எரிவாயு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து மோடி பேசுவார் என கூறப்படுகிறது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா பயணம்: கடந்த 2019 ஆம் ஆண்டு விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"அடுத்த மூன்று நாட்கள் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவில் இருக்கும். இந்த பயணம் இரு நாடுகளிடையே உள்ள நட்புறவை மேம்படுத்தும், இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாற்றுவதற்கு ஆவலாக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையே இதுவரை 21 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது 28 இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய- ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

முன்னதாக, இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய வருகையை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன, பொறாமை கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ள தெரிவித்துள்ள மாஸ்கோவின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், பிரதமர் மோடியின் வருகை ரஷ்யா - இந்தியா இடையேயான உறவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியா பயணம்: ரஷ்ய பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார். ஏறத்தாழ 41 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரியா பயணத்தில் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான் டெட் பெலனை, பிரதமர் மோடி சந்திக்கிறார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெஹாம்மர் சந்திக்கிறார் பிரதமர் மோடி. பின்னர் இருவரும் இந்தியா-ஆஸ்திரியா வணிக தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அங்கு வசிக்கும் இந்திய தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் அவர் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.