ETV Bharat / bharat

மூடா ஊழல்; "நான் பதவி விலகப் போவதில்லை”.. சித்தராமையா திட்டவட்டம்.. ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்! - siddaramaiah Muda scam

author img

By PTI

Published : Aug 17, 2024, 6:57 PM IST

Karnataka CM Siddaramaiah: ஊழல் வழக்கு விவகாரத்தில் நான் பதவி விலகப் போவதில்லை. காங்கிரஸ் உயரதிகாரிகள் என்னுடன் உள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசும் என்னுடன் உள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

karnataka cm
karnataka cm (Credits - ANI)

கர்நாடகா: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இட ஒதுக்கீட்டில் ஊழல் (மூடா) நடந்ததாக எழுந்த புகாரில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது பதவி விலகல் கோரிக்கையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிராகரித்துள்ளார். இந்த முடிவானது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா 2023 பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர், இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். கர்நாடகவில் ஆளும் கட்சியை கவிழ்க்க பிற கட்சிகள் சதி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு பெரிய சதி தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

டெல்லி, ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆளும் அரசை கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் அரசை கவிழ்ப்பதில் ஜே.டி, பாஜக உட்பட பல கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நான் பதவி விலகப் போவதில்லை. காங்கிரஸ் உயரதிகாரிகள் என்னுடன் உள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசும் என்னுடன் உள்ளது. அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என்னுடன் உள்ளனர் எனக் கூறி உள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மனு பெற்ற அன்றைக்கே அனுமதி கொடுப்பார் என்பதை நான் எதிர்பார்த்தேன். மேலும், மனு பெற்ற அன்றே எனக்கு காரண நோட்டீஸ் அனுப்பினார், அதன் அர்த்தம் என்ன? ஊழல் வழக்குகளில் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் மனுக்கள் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாநிலத்தில் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி காந்தி நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் குரு பர சங்க உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், அவரது உருவ பொம்மைகளை எரித்தும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாண்டியா மற்றும் தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளிலும் சித்தராமையாவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலும் டயர்களை எரித்தும், கோ பேக் கவர்னர் என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை! - Kolkata Doctor Case Update

கர்நாடகா: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இட ஒதுக்கீட்டில் ஊழல் (மூடா) நடந்ததாக எழுந்த புகாரில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது பதவி விலகல் கோரிக்கையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிராகரித்துள்ளார். இந்த முடிவானது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 17A மற்றும் பாரதிய நாகரிக் சுரஷா சன்ஹிதா 2023 பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர், இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். கர்நாடகவில் ஆளும் கட்சியை கவிழ்க்க பிற கட்சிகள் சதி செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்கு பெரிய சதி தீட்டப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

டெல்லி, ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆளும் அரசை கவிழ்த்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் அரசை கவிழ்ப்பதில் ஜே.டி, பாஜக உட்பட பல கட்சிகள் ஈடுபட்டுள்ளன. நான் பதவி விலகப் போவதில்லை. காங்கிரஸ் உயரதிகாரிகள் என்னுடன் உள்ளனர். ஒட்டுமொத்த அமைச்சரவையும், அரசும் என்னுடன் உள்ளது. அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என்னுடன் உள்ளனர் எனக் கூறி உள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மனு பெற்ற அன்றைக்கே அனுமதி கொடுப்பார் என்பதை நான் எதிர்பார்த்தேன். மேலும், மனு பெற்ற அன்றே எனக்கு காரண நோட்டீஸ் அனுப்பினார், அதன் அர்த்தம் என்ன? ஊழல் வழக்குகளில் பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் மனுக்கள் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாநிலத்தில் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி காந்தி நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் குரு பர சங்க உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், அவரது உருவ பொம்மைகளை எரித்தும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாண்டியா மற்றும் தாவணகெரே உள்ளிட்ட பகுதிகளிலும் சித்தராமையாவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலும் டயர்களை எரித்தும், கோ பேக் கவர்னர் என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை! - Kolkata Doctor Case Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.