ETV Bharat / bharat

குஜராத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு!

குஜராத் அம்ரேலி மாவட்டத்தின் சாவர்குண்ட்லா பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

EARTHQUAKE IN GUJARAT 3 DOT 7 MAGNITUDE FELT IN AMRELI SAVARKUNDLA AREA news article thumbnail
குஜராத் அம்ரேலி மாவட்டத்தின் சில இடங்களில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

அம்ரேலி/குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சாவர் குண்ட்லா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (அக்டோபர் 27) மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 5.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மிதியாலா, தஜாடி, சாவர் குண்ட்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அம்ரேலியில் உள்ள கம்பாவில் உள்ள தடானியா கிராமத்தில் ரத்தின தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், நிலநடுக்கத்தால் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ரத்தினக் கலைஞர்கள் நிலநடுக்கத்திற்கு பயந்து அங்கும் இங்கும் ஓடுவதை காணலாம். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிலநடுக்கம் உணரப்பட்ட இடம்: அம்ரேலி மாவட்டத்தின் தாரி, கிர் பந்தக், கம்பா கிர் பந்தக், லத்தி, லிலியா, சவர்குண்ட்லா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அம்ரேலி மாவட்டத்தில் மாலை 5.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. தாரி கிர் கிராமங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதையும் படிங்க
  1. 19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்!
  2. விமானப் பயணிகளுக்குக் குறி! புதிதாக கிளம்பியிருக்கும் 'லவுஞ்ச் பாஸ்' மோசடி
  3. "71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை"- மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

சாவர்குண்ட்லா நகர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கத்தின் தீவிரம் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக காந்திநகர் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்ரேலி/குஜராத்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சாவர் குண்ட்லா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று (அக்டோபர் 27) மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 5.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். மிதியாலா, தஜாடி, சாவர் குண்ட்லா உள்ளிட்ட கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அம்ரேலியில் உள்ள கம்பாவில் உள்ள தடானியா கிராமத்தில் ரத்தின தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், நிலநடுக்கத்தால் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ரத்தினக் கலைஞர்கள் நிலநடுக்கத்திற்கு பயந்து அங்கும் இங்கும் ஓடுவதை காணலாம். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிலநடுக்கம் உணரப்பட்ட இடம்: அம்ரேலி மாவட்டத்தின் தாரி, கிர் பந்தக், கம்பா கிர் பந்தக், லத்தி, லிலியா, சவர்குண்ட்லா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அம்ரேலி மாவட்டத்தில் மாலை 5.16 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. தாரி கிர் கிராமங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்தவுடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதையும் படிங்க
  1. 19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்!
  2. விமானப் பயணிகளுக்குக் குறி! புதிதாக கிளம்பியிருக்கும் 'லவுஞ்ச் பாஸ்' மோசடி
  3. "71 மருந்துகள் தரமான நிலையில் இல்லை"- மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

சாவர்குண்ட்லா நகர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். நிலநடுக்கத்தின் தீவிரம் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக காந்திநகர் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.