டெல்லி: 18வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பிரதமராக முன்றாவது நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதிய அரசு ஆட்சி அமைத்த பின் முதல் முறையாக மக்களவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு பின் முதலாவது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன் 24) கூடியது. தற்காலிக சபாநாயகர் பர்த்ஹருளி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
Congress MP K Suresh filed his nomination for the post of Speaker of the 18th Lok Sabha
— ANI (@ANI) June 25, 2024
NDA has fielded BJP MP Om Birla for the post of Speaker
(Picture shared by a Congress MP) pic.twitter.com/q5ZbvRVrgR
இந்நிலையில், இன்று (ஜூன் 25) இரண்டாவது நாளாக எம்.பிக்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து நாளை (ஜூன் 26) சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் ஓம் பிர்லா களம் இறங்க உள்ளார். அதை முன்னிட்டு சபாநாயகர் தேர்வுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.