ETV Bharat / bharat

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு; அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! - Arvind Kejriwal CBI chargesheet

author img

By PTI

Published : Jul 29, 2024, 12:34 PM IST

CBI chargesheet against Arvind Kejriwal: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Arvind
அரவிந்த் கெஜ்ரிவால் (Credits - ANI)

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சிறையிலே உள்ளார்.

இதையும் படிங்க: "அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்!

இந்த நிலையில் தான், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்படி, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார் என சிபிஐ தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊடக பொறுப்பாளர் விஜய் நாயர் பல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுபானக் கொள்கை மூலம் மதுபானம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து 5 முதல் 12 சதவீதம் வரை லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மதுபானக் கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும், இது தொடர்பான டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் கெஜ்ரிவால் வழிகாட்டுதலின் படியே நடைபெற்றதாகவும் முன்னதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனீஷ் சிசோடியாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு ஆகஸ்ட் 1 வரை அவகாசம் அளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதன் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, அதனை பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் மார்ச் 21 அன்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும், சிபிஐ மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சிறையிலே உள்ளார்.

இதையும் படிங்க: "அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்!

இந்த நிலையில் தான், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்படி, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார் என சிபிஐ தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஊடக பொறுப்பாளர் விஜய் நாயர் பல மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் தொடர்பில் இருந்தார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுபானக் கொள்கை மூலம் மதுபானம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து 5 முதல் 12 சதவீதம் வரை லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், மதுபானக் கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும், இது தொடர்பான டெல்லி அரசின் அனைத்து முடிவுகளும் கெஜ்ரிவால் வழிகாட்டுதலின் படியே நடைபெற்றதாகவும் முன்னதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனீஷ் சிசோடியாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு ஆகஸ்ட் 1 வரை அவகாசம் அளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதன் விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, அதனை பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.