ETV Bharat / bharat

மக்களவை தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்! ஒடிசாவை சேர்ந்தவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? - Lok sabha Speaker

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 11:54 AM IST

மக்களவை இடைக்கால சபாநாயகராக ஒடிசாவை சேர்ந்த ஏழு முறை எம்பியான பர்த்ருஹரி மஹ்தாபை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
President Drapoudi Murmu has appointed Bhartruhari Mahtab, a Member of Lok Sabha, as Pro-tem Speaker (ETV Bharat)

டெல்லி: ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 95ன் கீழ் ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ஆம் தேதி தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.

இந்த பதவியேற்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அவருக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, பா.ஜ.க உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் அடங்கிய குழு உதவுவார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தாப் ஒடிசா மாநிலம் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். ஏழு முறை எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார்.

17வது மக்களவையில் ஓம் பிர்லா சபாநாயகராக பதவி வகித்தார். இந்நிலையில், 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்துள்ளதால் சபாநாயகர் பொறுப்பை ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கோருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சபாநாயகர் தேர்வு குறித்து கூட்டணி கட்சிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேநேரம் தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் சபாநாயகர் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இந்தியா கூட்டணி சார்பில் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "முறைகேடு உறுதியானால் நீட் தேர்வு ரத்து" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - Dharmendra Pradhan press meet

டெல்லி: ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவை தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 95ன் கீழ் ஒடிசா மாநிலம் கட்டாக்கை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை இடைக்கால சபாநாயகராக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளதாக அவர் கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24ஆம் தேதி தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.

இந்த பதவியேற்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அவருக்கு காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர்.பாலு, பா.ஜ.க உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் அடங்கிய குழு உதவுவார்கள் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தாப் ஒடிசா மாநிலம் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர். ஏழு முறை எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப் மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து கொண்டார்.

17வது மக்களவையில் ஓம் பிர்லா சபாநாயகராக பதவி வகித்தார். இந்நிலையில், 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்துள்ளதால் சபாநாயகர் பொறுப்பை ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் மற்றும் பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் கோருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சபாநாயகர் தேர்வு குறித்து கூட்டணி கட்சிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேநேரம் தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் சபாநாயகர் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இந்தியா கூட்டணி சார்பில் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "முறைகேடு உறுதியானால் நீட் தேர்வு ரத்து" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - Dharmendra Pradhan press meet

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.