ETV Bharat / bharat

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சங்கிற்கு ஜாமீன்! உச்ச நீதிமன்றம் உத்தரவு! - MP Sanjay Singh got Bail

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 4:24 PM IST

Sanjay Singh: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 6 மாதத்திற்கு பின் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

முன்னதாக, ஜாமீன் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை, ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும், அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதையும், அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில் தெரிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், ஜாமீனில் இருக்கும் வரை வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் மூத்த ஆம் ஆத்மி தலைவர் ஆனார் சஞ்சய் சிங்.

முன்னதாக, இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு.. - Arvind Kejriwal

டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத் துறை தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

முன்னதாக, ஜாமீன் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் பிபி வரலே ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து ஊழல் பணம் எதுவும் மீட்கப்படவில்லை, ஆனாலும், அவரை ஆறு மாதங்களாக சிறையில் வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும், அவருக்கு தற்போது காவல் தேவையா இல்லையா என்பதையும், அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டை விசாரணையில் தெரிந்து கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அமலாக்கத் துறை தரப்பில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், ஜாமீனில் இருக்கும் வரை வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற முதல் மூத்த ஆம் ஆத்மி தலைவர் ஆனார் சஞ்சய் சிங்.

முன்னதாக, இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் தவிர, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு.. - Arvind Kejriwal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.