ETV Bharat / bharat

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல்.. ஒடிசாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக் கடலில் டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல்
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள டானா புயல் (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

புவனேஸ்வர்: ஒடிசாவின் கடலோரப் பகுதியில் இன்று (அக்.24) காலை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. மேலும் கடல் பகுதிகள் மிகவும் சீற்றமாக உள்ள நிலையில், கடுமையான சூறாவளி புயலான 'டானா' மாநிலத்தின் கடற்கரையை நெருங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி ஊடகங்களிடம் கூறுகையில், "கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் புயலானது நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிசாவின் பாரதிப்புக்கு 260 கி.மீ தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யமுனா நதியை அச்சுறுத்தும் நச்சு நுரை; ஏன் இப்படி நடக்கிறது?

இதுமட்டும் அல்லாது பூரி, கோர்தா, நாயகர், தேன்கனல், கியோஞ்சர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், கந்தமால், கஞ்சம், ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் மேற்கு-தெற்கு திசையில் கடுமையான சூறாவளி புயல் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சூழலில், அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் தெற்கு ஒடிசாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

புவனேஸ்வர்: ஒடிசாவின் கடலோரப் பகுதியில் இன்று (அக்.24) காலை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. மேலும் கடல் பகுதிகள் மிகவும் சீற்றமாக உள்ள நிலையில், கடுமையான சூறாவளி புயலான 'டானா' மாநிலத்தின் கடற்கரையை நெருங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி ஊடகங்களிடம் கூறுகையில், "கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் புயலானது நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிசாவின் பாரதிப்புக்கு 260 கி.மீ தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யமுனா நதியை அச்சுறுத்தும் நச்சு நுரை; ஏன் இப்படி நடக்கிறது?

இதுமட்டும் அல்லாது பூரி, கோர்தா, நாயகர், தேன்கனல், கியோஞ்சர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், கந்தமால், கஞ்சம், ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் மேற்கு-தெற்கு திசையில் கடுமையான சூறாவளி புயல் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சூழலில், அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் தெற்கு ஒடிசாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.