காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய காஞ்சிப் பட்டு துணியினை மாவட்டத் தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிமுகப்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குனர் கணேசன், நெசவாளர் கோவிந்தராஜ், வடிவமைப்பாளர் உமாபதி, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.