தமிழ்நாடு

tamil nadu

நளினிக்கு மேலும் பரோல் நீட்டிப்பு!

By

Published : Mar 25, 2022, 10:44 PM IST

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பெண்களுக்கான தனிச்சிறையில் தண்டனை பெற்று வரும் நளினி தற்போது பரோலில் உள்ள நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நளினிக்கு மேலும் பரோல் நீட்டிப்பு
நளினிக்கு மேலும் பரோல் நீட்டிப்பு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக்கோரி அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, பத்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கவனித்துக்கொள்ள நளினிக்கு பரோல் கொடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி அவருக்கு பரோலில் வெளியே வந்தார். பின்னர், நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் பத்மா தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து அவரின் பரோலை நீட்டித்து வந்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 26ஆம் தேதிவரை நளினியின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நளினிக்கு பரோல் நீட்டிக்கப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அசைவ உணவகங்களிலும் அரசுப்பேருந்துகளை நிறுத்தலாம் - போக்குவரத்துத் துறை

ABOUT THE AUTHOR

...view details