தமிழ்நாடு

tamil nadu

புழல் தேக்கு மர குடோனில் தீ விபத்து... 50 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்!

By

Published : Sep 4, 2020, 2:45 PM IST

திருவள்ளூர்: புழலில் தேக்கு மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

gos
od

திருவள்ளூர் மாவட்டம் புழலில் நாகப்பா எஸ்டேட் பகுதியில் ரவிலால் என்பவருக்கு சொந்தமான ஜெலால்ராம் டிம்பர் குடோன் உள்ளது. இங்கு தேக்கு மரத்தால் ஆன மரங்கள் இறக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று (செப்.4) அதிகாலை 3 மணியளவில், குடோனில் இருந்த தேக்கு மரக்கடைகளில் திடீரென் தீ பிடித்து ஏரிந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம், செங்குன்றம், வியாசர்பாடி, செம்பியம் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடோனில் எரிந்த பொருள்களின் மதிப்பு சுமார் 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details