ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுள்ளிக்கரடு முனியப்ப சாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சித்திரை பெளர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிடாக்களை வெட்டி விழாவை நடத்துவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் சுள்ளிக்கரடு மினியப்பச்சி குருபூஜை விழா வரும் சித்திரை பௌர்ணமி மே 5ஆம் தேதி நடைபெறும் என கோயில் விழாக்குழுவினர் அறிவிப்பு செய்திருந்தனர்.
ஆனால், கரோனா வைரஸால் ஊரடங்கு மே 17ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால் சுள்ளிக்கரடு முனியப்ப சாமி கோயில் குருபூஜை விழாவை அடுத்தாண்டிற்கு ஒத்திவைப்பதாக கோயில் விழாக் குழுவினரும், நிர்வாகத்தினரும் அறிவித்துள்ளனர்.