தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10ஆம் தேதிவரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அமைச்சர் வேலுமணி ஊழல்
இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். அராஜக, ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர் வேலுமணியின் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வருகிறோம். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.