தமிழ்நாடு

tamil nadu

பாஜகவிடம் விலைக்குச் சென்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- திருமாவளவன்!

By

Published : Feb 24, 2021, 4:18 PM IST

புதுச்சேரி: பாஜக விரித்த வலையில் விலைக்குச் சென்றவர்களை புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் திமுக கூட்டணி அரசை கவிழ்க்க சதி செய்து, மூன்று நியமன உறுப்பினர்கள் மூலம் ஆட்சியை கலைத்து, ஜனநாயக படுகொலை செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி அண்ணாசதுக்கம் அருகே காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜனநாயக படுகொலை செய்ததற்கு அதிமுக துணை போகியுள்ளது. காங்கிரஸ் அரசுக்கு செய்த துரோகம் என்பதை விட வாக்களித்த மக்களுக்கு பாஜக செய்தது தான் இந்தத் துரோகம்.

பாஜக விரித்த வலையில் விலைக்குச் சென்றவர்களை புதுச்சேரி மக்கள் புறக்கணிக்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டணியில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற்று பாஜகவிற்கு பாடம் புகட்டப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'புதுச்சேரியின் அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கியது பாஜக' - திருமுருகன் காந்தி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details