சென்னை: டெல்லியில் கடந்த மாதம் 24ஆம் தேதி ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
இந்த 300 பேருக்கும் கட்சி சார்பில் எந்த நிதி உதவியும் செய்யவில்லை என்றும்; விருப்பமுள்ளவர்கள் கமல்ஹாசனுடன் நடைபயணத்தில் கலந்துகொள்ளலாம் எனவும் கமல் தெரிவித்திருந்தார். அதன்படி கட்சியினர் தங்கள் சொந்த செலவில், விமானத்திலும் ரயிலிலும் டெல்லிக்கு சென்றிருந்தனர்.