தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் கண்டுப்பிடித்த ஆளில்லா விமானங்கள் ஏற்கனவே பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த விமானங்களை மாநிலப் பேரிடர் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள வானூர்தி துறை தயாரித்த 6 ஆளில்லா விமானங்கள் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.