தமிழ்நாடு

tamil nadu

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்..

By

Published : Jun 22, 2022, 1:06 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 22 ஆம் தேதி இன்று முதல் ஜூலை 7 ஆம்  தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

apply-online-starts-from-today-to-join-government-arts-and-science-college அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்.. அப்ளிகேஷன் போடுங்க பாஸ்...
apply-online-starts-from-today-to-join-government-arts-and-science-college அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்.. அப்ளிகேஷன் போடுங்க பாஸ்...

சென்னை:இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பக்கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்த முடியாதவர்கள் சேவை மையங்களில் டிடியாக அளிக்கலாம் . மாணவர்கள் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விபரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாறிவரும் தலைமுறைக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details