கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 21ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பொதுவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாகிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், எட்டு பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதையடுத்து, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை காப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அலுவலர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்யை நிதியுதவியாக அரசின் அவசர காலநிதியாக வழங்கியுள்ளது.