நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தான் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரின் மரணம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ஆகியோர் விசாரனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் பலரும் சுஷாந்த் மரணம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் சுஷாந்தின் தங்கை ஸ்வேதா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த்தை தற்கொலைக்கு துண்டியவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.