தமிழ்நாடு

tamil nadu

சுஷாந்த் சிங் அஸ்தி இன்று (ஜூன் 18) கரைக்கப்படுகிறது!

By

Published : Jun 18, 2020, 3:36 PM IST

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தி பிஹார் மாநிலம் பாட்னாவில் இன்று கரைக்கப்படும் என அவரது சகோதரி ஸ்வேதா சிங் தெரிவித்துள்ளார்.

Sushant Singh Rajput ashes to be immersed in Patna today
Sushant Singh Rajput ashes to be immersed in Patna today

இது குறித்து அவரது முகநூலில் பதிவிட்ட ஸ்வேதா, "நேற்று (ஜூன் 17) பாட்னாவில் உள்ள எனது வீட்டிற்கு பத்திரமாகச் சென்று சேர்ந்தேன். பிரார்த்தனை செய்தவர்களுக்கும் இறுதி நிகழ்வை நடத்த உதவியவர்களுக்கும் நன்றிகள். இது தொந்தரவில்லாமல் இருந்தது. இன்று (ஜூன் 18) அண்ணனின் அஸ்தி கரைக்கும் நிகழ்வை நாங்கள் செய்துமுடிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும், அவருக்காக (சுஷாந்த் சிங் ராஜ்புத்) மீண்டும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உள்ளங்களில் இருக்கும் அன்போடும் மகிழ்வான நினைவுகளுடனும் அவரை அனுப்பி வையுங்கள் எனவும் ஸ்வேதா கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க...'சுஷாந்த் சிங் ராஜ்புட், சிரஞ்சீவி சர்ஜா எனது அன்பிற்குரிய நண்பர்கள்'- நடிகர் சிம்பு

ABOUT THE AUTHOR

...view details