தமிழ்நாடு

tamil nadu

சுஷாந்திற்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்!

By

Published : Sep 18, 2020, 11:55 PM IST

மறைந்த நடிகர் சுஷாந்தின் மெழுகுச் சிலையை அவரது ரசிகர் ஒருவர் உருவாக்கி அருங்காட்சியத்தில் வைத்துள்ளார்.

சுஷாந்த்
சுஷாந்த்

மறைந்த நடிகர் சுஷாந்தின் நினைவாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுசாந்தா ராய் என்ற ரசிகர் ஒருவர்மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இதனை அங்குள்ள அனன்சோல் பகுதியில் இருக்கும் அருங்காட்சியத்தில் வைத்துள்ளார். சுஷாந்தின் மெழுகு சிலை புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறிய நிலையில், தற்போது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details