தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பிய டாப்ஸி

By

Published : Jul 7, 2020, 8:13 PM IST

மும்பை: கரோனா தொற்றுக்கு மத்தியில் நடிகை டாப்ஸி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

டாப்ஸி பன்னு
டாப்ஸி பன்னு

கரோனா தொற்று நோய் அச்சம் காரணமாக இந்தியாவில் மார்ச் இறுதி வாரம் முதல் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திரைப் பிரபலங்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிபந்தனைகளுடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை டாப்ஸி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரவனில் இருக்கும் கண்ணாடி முன்பு அமர்ந்து மேக்கப் செய்துகொள்ளும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில்தான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் 'Let's do this. #BackToWork' என்று தலைப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details