தமிழ்நாடு

tamil nadu

பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

By

Published : Sep 20, 2021, 3:59 PM IST

ஹோட்டல்களில் கெட்டுப்போன மாடு, ஆடு, கோழி இறைச்சிகளில் பிரியாணி செய்து விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Biryani in expired meat
Biryani in expired meat

அண்மை காலமாக தமிழ்நாட்டில் உள்ள ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகளில் பிரியாணி செய்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆங்காங்கே சோதனைகளிலும் ஈடுபட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்துவருகின்றனர்.

இப்படிப்பட்ட புகார்களின் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று (செப்.20) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், பல்வேறு ஹோட்டல்களில் இருந்து கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, காலாவதியான 8 கிலோ சிக்கன் பிரியாணி, 2 கிலோ சிக்கன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:ஊரடங்கை மீறி இறைச்சிக் கடை திறப்பு: 100 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details