தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலை நடக்கத்தான் செய்யும் - ஜான்பாண்டியன்

By

Published : Dec 12, 2019, 2:22 PM IST

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகளும், சண்டைகளும் நடக்கத்தான் செய்யும் என்று தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

john paandiyan, ஜான்பாண்டியன்
john paandiyan

மதுரையில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது எனக்கூறிய அவர், நமக்கான உரிமையை மீட்கும் குடியுரிமை மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது வரவேற்கதக்கது. அதிமுக போல திமுகவும் பாஜகவோடு கூட்டணி வைத்திருந்தால் மசோதாவை ஆதரித்திருப்பார்கள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களால்தான் அங்கே ஈழத்தமிழர்கள் அழிந்தார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 'உள்ளாட்சி தேர்தல் என்றால் கொலைகளும், சண்டைகளும் நடக்கதான் செய்யும். எனவே சட்டம் ஒழுங்கை கண்காணித்து அரசு பாதுகாப்பை பலபடுத்த வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஜான்பாண்டியன்

சாதிய ரீதியான பிரச்சனைகளை தவிர்க்க மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயரை சூட்ட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆணவ கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details