தமிழ்நாடு அரசு சார்பில் 2020-202ஆ1ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ஆம் தேதி நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்றன.
கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற மார்ச் 9ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டுள்ளனர்.