சென்னையை அடுத்த பெரும்பாக்கம் காந்தி நகரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் யூனிஸ்(22). அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் குவாலா(19), சிவம் நாயக்(21), ஜோரா முண்டா(18), பிஜய் நாயக்(20) ஆகிய வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் 4 பேருக்கும் யூனிஸ்க்கும் இடையே பணத்தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 2015ஆம் ஆண்டு யூனிஸ் கொலை செய்யப்பட்டதால் 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நால்வருக்கும் நீதிமன்றம் ஜாமின் அளித்த நிலையில் குற்றவாளிகள் நால்வரும் கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜாராகாமால் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்ய நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்த நிலையில், பெரும்பாக்கம் ஆய்வாளர் மகுடீஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர் ஷேக் முஸ்தக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து அஸ்ஸாம் மாநிலம் சென்றனர்.