பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்கள், இணையசேவை பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் சைபர் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு விழிப்புணர்வுகளை காவல் துறையினர் வழங்கிவருகின்றனர்.
பெருகிவரும் சைபர் குற்றங்களைத் தடுக்கும்பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக ஏடிஜிபி தலைமையில் தனிக் குழுவும் நியமனம்செய்யப்பட்டது.