06:36 May 15
சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது அது டவ்-தே புயலாக உருவெடுத்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. டவ்-தே என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கி.மீ., வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டவ்-தே புயல் காரணமாக கேரளா, தமிழ்நாடு, கோவா, கர்நாடக, குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புயலானது பாகிஸ்தான் அல்லது குஜராத் நோக்கி அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.