உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான புவன் சந்திர கந்தூரியின் மகன் மனிஷ் கந்தூரி. இவர் இன்றுராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில்இணைந்தார்.
பின்னர் டேராடூனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பேரணியில் கலந்து கொண்டு ராகுலுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில்ஈடுப்பட்டார்.
இது குறித்து புவன் சந்திர கந்தூரி கூறுகையில்,“எனது மகன் படித்த இளைஞன். அவனுக்கு தெரியும். அவன் எங்கே போக வேண்டும் என்று.இதில் நான் எந்த கேள்வியும் கேட்க முடியாது” என்றார்.