தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

கொய்யாப்பழ பெட்டியில் கொடிய விஷப் பாம்பு : கோயம்பேட்டில் பரபரப்பு..

டப்பாவில் அடைக்கப்பட்ட பாம்பு
டப்பாவில் அடைக்கப்பட்ட பாம்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 1:16 PM IST

சென்னை: கோயம்பேடு பழச்சந்தையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் பழம் ஏற்றிக் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று லாரி மூலம் வந்து இறங்கிய கொய்யப்பழ பெட்டிகளை அங்கிருந்து தொழிலாளர்கள் இறக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெட்டியில் பல்லிபோல் ஏதோ மறைந்தது நெளிந்து கொண்டிருந்துள்ளது. அதை கண்ட தொழிலாளர்கள் அந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு விஷத்தன்மை கொண்ட சிறிய வகை நாகப்பாம்பு ஒன்று கண்டுள்ளனர். பின் அந்த பாம்பை தொழிலாளர்கள் லாவகமாக பிடித்த பிளாஸ்டிக் டப்பா ஒன்றிகுள் பத்திரமாக அடைத்தார். இதையடுத்து அந்த பாம்பை அருகேயுள்ள கூவம் நதிக்கரையில் சென்று விட்டுவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details